பக்கம் எண் :

மூன்றாவது மருதம்409

(68) (1) பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு
மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலுார;
6ஊரன்மன் னுரனல்ல னமக்கென்ன வுடன்வாளா
தோரூர்தொக் கிருந்தநின் பெண்டிரு ணேராகிக்
களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை
வளையின்வாய் விடன்மாலை மகளிரை நோவேமோ
கேளல னமக்கவன் குறுகன்மி னெனமற்றெந்
தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்;
12ஊடியார் நலந்தேம்ப வொடியெறிந் தவர்வயின்
மாறீர்க்கு மவன்மார்பென் றெழுந்தசொன் னோவேமோ
முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின் றாரெள்ள
வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்;
16சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் வினாயினன்
றேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ

நெஞ்ச, மறைபோன தன்றிங் கவன்வழியே" அம்பிகா. 512. (ஈ) "மகிழ்நர் தம்மே, லன்போடு நன்னெஞ் சறிவறை போக" தஞ்சை. 378. என்பவைகளும் (உ) "மொய்கொண் டெழுந்த வமரகத்து மாற்றார் வாய்ப்,
பொய்காண் டறைபோய்த் திரிபவர்க்கு" பழ. 241 (ஊ) "அறிவறை போகிய பொறியறு நெஞ்சத் திறை" சிலப்். 20 : 25. (எ) "அறைபோக் கமைச்சின் முறைபோக் கெண்ணினும்” பெருங். (3) 17 : 53
(ஏ) “கீழ்ந்தறை போகிய கிளைஞராமென” கந்த. மார்க்கண்டேய.86. (ஐ) “காசுண்ட பூணா னறை போய கருத்த னானான்” (ஒ) “நானறைபோய மனத்தோ டிங்குப், பரிவுறலும்” திருவிளை. வரகுணனுக்குச்.10; வன்னியுங். 22 என்பவைகளும் (ஓ) “ஓட்டை நெஞ்சின ராய்” (சீவக. 642) என்பதற்கு, 'அறைபோய நெஞ்சினராய்’ என்றெழுதியிருக்கும் உரையும் இங்கு ஒப்புநோக்கற் பாலன.

1. புல்லுதன் மயக்கும் புலவிக்கண் காமக்கிழத்தியர் கூற்று நிகழ்தற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டி, இது மூவகை யார்க்கும் பொது வென்பர், இளம்; தொல், கற்பி. சூ, 8, ‘புல்லுதன் மயக்கும்’