பக்கம் எண் :

438கலித்தொகை

யழிந்துநிற் பேணிக் கொளலி னிழிந்ததோ
விந்நோ யுழத்த லெமக்கு

எ - து: முன்பு எம்மை நீ செறிகையினாலே யாமும் நின்னோடு செறிதலை யுற்றேம்; இக்காலத்து நீ செய்யுங் குறைகளை அறியலுற்று அதனானே அழிந்துகெடுகின்ற நெஞ்சத்தினையுடையேம்; அதன்மேலே வருத்தத்திலே தங்கும்படியாக நீ செய்து கழிந்த இக்குறைகளைக் குறையென்று நினையாதே நின்னைக் கண்டஇடத்தே நெஞ்சு அழிந்து நின்னைப்பேணிக்கொள்ளுதலின், இக்காமநோயிலே தங்குதல் எமக்குத் தாழ்ந்ததொரு 1தொழிலோ? இஃது இழிந்ததன்றுகாண். எ - று.

இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.
இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (7)

(73) அகன்றுறை யணிபெறப் புதலொடு தாழ்ந்த
பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை
கண்பொர வொளிவிட்ட வெள்ளிய வள்ளத்தாற்
றண்கமழ் நறுந்தேற லுண்பவண் முகம்போல
வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர;
6நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ்தொடி யிளையவ ரிடைமுலைத் தாதுசோர்ந்
திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்;
10கனற்றிநீ செய்வது கடிந்தீவா ரில்வழி
மனத்திற்றீ திலனென மயக்கிய வருதிம
னலமர லுண்கண்ணா ராய்கோதை குழைத்தநின்
மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம்வந் துரையாக்கால்;
14என்னைநீ செய்யினு முரைத்தீவா ரில்வழி
முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிமன்
னிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக்
கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்;
எனவாங்கு;
18மண்டுநீ ராரா மலிகடல் போலுநின்
றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும்

(பிரதிபேதம்) 1தொழிலோவிது இழிந்ததன்று காணென வூடறீர்ந்தாள் இதனால்.