பக்கம் எண் :

மூன்றாவது மருதம்611

இஃது ஏழடித்தரவும் மூன்றடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (34)

(100). ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள்சீக்குஞ் சுடரேபோல்
வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்த கொடுமையு
நீண்டுதோன் றுயர்குடை நிழலெனச் சேர்ந்தார்க்குக்
காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையு
மாண்டநின் னொழுக்கத்தான் மறுவின்றி வியன்ஞாலத்
தியாண்டோருந் தொழுதேத்து மிரங்கிசை முரசினாய்;
7ஐயந்தீர்ந் தியார்கண்ணு மருந்தவ முதல்வன்போற்
பொய்கூறா யெனநின்னைப் புகழ்வது கெடாதோதா
னல்கிநீ தெளித்தசொ னசையெனத் தேறியாள்
பல்லிதழ் மலருண்கண் பனிமல்கக் காணுங்கால்;
11சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கு
மிரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்
கலங்கஞ ருற்றுநின் கமழ்மார்பு நசைஇயா
ளிலங்குகோ லவிர்தொடி யிறையூரக் காணுங்கால்;
15உறைவரை நிறுத்தகோ லுயிர்திறம் பெயர்ப்பான்போன்
முறைசெய்தி யெனநின்னை மொழிவது கெடாதோதா
னழிபடர் வருத்தநின் னளிவேண்டிக் கலங்கியாள்
பழிதபு வாண்முகம் பசப்பூரக் காணுங்கால்;
ஆங்கு;
20தொன்னல மிழந்தோணீ துணையெனப் புணர்ந்தவ
ளின்னுறல் வியன்மார்ப வினையையாற் கொடிதென
நின்னையான் கழறுதல் வேண்டுமோ
வென்னோர்க ளிடும்பையுங் களைந்தீவாய் நினக்கே.

இதுவுமது. (1)

இதன் பொருள்.

ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள் 1சீக்குஞ் சுடரேபோல்
2வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்தகொடுமையு


1. காமத்து மிகுதிறத்தான் அரசனை நோக்கிச் [ெ]ச (ா)ன்றோர். கூறிய தாகலின் மருதத்துக் கோத்தாரென்பர். நச். தொல். அகத். சூ. 13.

(பிரதிபேதம்)1சீய்க்கும், 2ஓண்டாதார.