பக்கம் எண் :

664கலித்தொகை

மைஞ்சீ ரடியு முளவென மொழிப'' (1) என்பதனான் மூவகைப் பாவிற்கும் ஐஞ்சீரடிவருதல் பெற்றாம். (4)

105அரைசுபடக் கடந்தட் டாற்றிற் றந்த
முரைசுகெழு முதுகுடி முரண்மிகு செல்வற்குச்
சீர்மிகு சிறப்பினோன் றொல்குடிக் குரித்தெனப்
பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த
வார்கலி யுவகையா ரொருங்குடன் கூடித்
தீதின்று பொலிகெனத் தெய்வக் கடியயர்மார்
வீவில் குடிப்பி னிருங்குடி யாயருந்
தாவி லுள்ளமொடு துவன்றி யாய்புடன்
வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத்
10தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியு
மொருகுழை யவன்மார்பி லொன்டார்போ லொளிமிகப்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்
பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற் றணிபோல
விரும்பின ரெருத்தி னேந்திமிற் குராலு
15மணங்குடை வச்சிரத்தோ னாயிரங் கண்ணேய்க்குங்
கனங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும்
வேல்வலா னுடைத்தாழ்ந்த விளங்குவெண் டுகிலேய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண்காற் சேயுங்
கால முன்பிற் பிறவுஞ் சால
20மடங்கலுங் கணிச்சியுங் காலனுங் கூற்றுந்
தொடர்ந்துசெல் லமையத்துத் துவன்றுயி ருணீஇய
வுடங்குகொட் பனபோற் புகுத்தனர் தொழூஉ;
23அவ்வழி,
காரெதிர் கலியொலி கடியிடி யுருமி னியங்கறங்க
வூர்பெழு கிளர்புளர் புயர்மங்குலி னறைபொங்க
நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்பச்
சீர்கெழு சிலைநிலைச் செயிரிகன் மிகுதியிற் சினப்பொதுவர்

புணர்தற்பொருண்மைத்தாயினும் முல்லைக்குரிய கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்றென்பர் இளம்; தொல். அகத். சூ. 24.

1. தொல். செய். சூ. 63 :