(1)ஆம்பலென்னும் பண்ணையுடைய குழலாலே குறிசெய்து வருவாயாக என்றாள் எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகைபிறந்தது. இதனுள், தலைவன் வினைவலபாங்கினனாயவாறு காண்க. இது கைக்கிளை. இது தரவும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் சொற்சீரடியும் கொச்சகமும் தனிச்சொல்லும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் ஒருதாழிசையும் ஐஞ்சீரடியானொன்றும் கொச்சகமும் தனிச்சொல்லும் நெடுவெண்பாட்டும் சொற்சீரடியும் நெடுவெண்பாட்டும் முச்சீரானொன்றும் நெடுவெண்பாட்டும் வெள்ளைச்சுரிதகமும் பெற்று வந்த கொச்சகக்கலி. (8) (109). | காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப் பேராது சென்று பெரும்பதவப் புன்மாந்தி நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் போராரா வேற்றின் பொருநா கிளம்பாண்டி | 5 | றேரூரச் செம்மாந் ததுபோன் மதைஇனள் பேரூருஞ் சிற்றூருங் கௌவை யெடுப்பவள்போன் மோரோடு வந்தா டகைகண்டை யாரோடுஞ் சொல்லியா ளன்றே வனப்பு; | 6 | பண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய கண்ணி யெடுக்கல்லாக் கோடேந் தகலல்குல் புண்ணில்லார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங் கண்ணளோ வாய மகள்; | 13 | இவடான், திருத்தாச் சுமட்டின ளேனைத்தோள் வீசி வரிக்கூழ வட்டி தழீஇ யரிக்குழை யாடற் றகையள் கழுத்தினும் வாலிது நுண்ணிதாத் தோன்று நுசுப்பு; | 17 | இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின்: |
1. (அ) "இயவர், தீங்குழ லாம்பலி னினிய விமிரும்” ஐங். 215. (ஆ) "ஆய ரினம்பெயர்த் தாம்ப லடைதர” திணைமொழியைம். 27.
|