சிறிதேறத் தழுவிக் கொண்டு அச்சத்தால் தளர்ந்து நடந்து பக்கத்திலுண்டான செல்லுதற்கரிய கானத்திலே சென்று ஒளித்தே னென்றாள்; அதுகேட்ட தோழி, ஏடீ! அப்பூ வீழ்ந்ததற்கு நீ அவ்விடத்தே அஞ்சுவது என்னகாரியத்திற் 1கென்றாள். எ-று. 17 | அஞ்சல், (1) அவன்கண்ணி நீ புனைந்தா யாயி னமரு மவன்க ணடைசூழ்ந்தார் நின்னை யகன்கண் வரைப்பின் (2) மணற்றாழப் 2பெய்து திரைப்பில் வதுவையு மீங்கே யயர்ப வதுவேயா மல்கலுஞ் சூழ்ந்த வினை |
எ - து: என்று பின்னும் நின் தலைவன் கண்ணியை நீ சூடினாயாயின் அதற்கேற்ப நம்முடைய சுற்றத்தாரும் நின்னை அவனிடத்தே அடுத்தலைச் சூழ்ந்தார்; அதுவேயன்றி அகன்ற இடத்தையுடைய முற்றத்தே மணலைத் 3தங்கப்பெய்து திரையிட்டுக் கல்யாணமும் இப்பொழுதே செய்வார்கள்; பகலேயன்றிப் போன இரவிலும் ஆராய்ந்த காரியம் 4அக்காரியமேயாம்; நீ அஞ்சாதேகொள்ளென்றாள். எ - று. இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது. 5இஃது ஐஞ்சீரடுக்கி வந்த தரவும் பாட்டுஞ் சுரிதகமும் பெற்ற கலிவெண்பா. (15) (116). | பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேமெந் தாம்பி னொருதலை பற்றினை யீங்கெம்மை முன்னைநின் றாங்கே விலக்கிய வெல்லாநீ யென்னையே முற்றாய் விடு; | 5 | விடேஎன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவய நாகுபோ னோக்கிக் கொடுமையா னீங்கிச் சினவுவாய் மற்று; |
1. “நின் கூழையு ளேறவன், கண்ணிதந் திட்ட தெனக்கேட்டு.......................... நின்னையப், பொய்யில் பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோ டையன்மா ரெல்லா மொருங்கு” கலி. 107: 30 - 34. 2. “மணற்றாழப் பெய்து” (கலி. 114: 12.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1என்றாள் அவன்கண்ணி, 2பெயது வதுவையும், 3தங்கப்பெய்து கல்லியாணமிப்பொழுதே, 4அக்காரியமேயாமினியஞ்சாதே, 5இதுஐஞ்சீரடுக்கி.
|