பக்கம் எண் :

792கலித்தொகை

அடும்பை விரைந்தளித்தாற்போல இவளுடைய இறையில் வளைகழன்ற வருத்தத்தையுடைய நோய்தீரும்படி அருளினையாய் வரைந்துகொள்ளென வரைவுகடாயினாள். எ - று.

(1) வளைகழலுதல் வெளியாக வருத்தத்தைவிளக்குதல்பற்றிச் சுரிதகத்து வளைநெகிழ்தலைக்கூறினாள்.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.
இஃது ஒத்தாழிசைக்கலி.(10)

(128)தோடுறந் தருளா தவர்போ னின்று
வாடை தூக்க வணங்கிய தாழை
யாடுகோட் டிருந்த வசைநடை நாரை
நளியிருங் கங்கு னந்துய ரறியா
5தளியின்று பிணியின்று விளியாது நரலுங்
கானலஞ் சேர்ப்பனைக் கண்டாய் போலப்
புதுவது கவினினை யென்றி யாயி
னனவின் வாரா நயனி லாளனைக்
கனவிற் கண்டியான் செய்தது கேளினி;
10அலந்தாங் கமையலெ னென்றானைப் பற்றியென்
னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங்
கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப்
புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்;
14முலையிடைத் துயிலு மறந்தீத் தோயென
நிலையழி நெஞ்சத்தே னழுவேன் போலவும்
வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத்
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்;
18கோதை கோலா விறைஞ்சி நின்ற
வூதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும்
யாதென் பிழைப்பென நடுங்கி யாங்கே
பேதையை பெரிதெனத் தெளிப்பான் போலவும்;

ஆங்கு;


1. “துறைவன் றுறந்தமை தூற்றாகொன் மூன்கை, யிறையிறவா நின்றவளை” குறள். 1157.