இதனால், (1) கனவொடு மயங்கலென்னும் மெய்ப்பாடு தலைவிக்குத் தோன்றிற்று. இஃது “இடைநிலைப்பாட்டு” (2) என்றதனால் தாழம்பட்ட ஓசையின்றி வந்த இடைநிலைப்பாட்டுப் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலிப்பா. (11) (129) | தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந் திருந்தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை; | 8 | பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கட றூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிற நோய்தெற வுழப்பார்க் ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையையோ, நீ; | 12 | மன்றிரும் பெண்ணை மடல்சே ரன்றி னன்றறை கொன்றன ரவரெனக் கலங்கிய வென்றுய ரறிந்தனை நாறியோ வெம்போல வின்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ; | 19 | பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ லினிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ; | | எனவாங்கு; | 21 | அழிந்தய லறிந்த வெவ்வ மேற்படப் பெரும்பே துறுதல் களைமதி பெரும |
1. இம்மெய்ப்பாட்டுக்கே “அலந்தாங்..........அளிப்பான் போலவும்” என்பது மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கிறது; தொல். மெய்ப். சூ. 22. பேரா. இ - வி. 580. 2. தொல். செய். சூ. 132.
|