பக்கம் எண் :

804கலித்தொகை

காரியத்தைக் கெடுக்குமதிலும் கொடிதுகா ணென அவளாற்றாமையைத் தோழி கூறி வரைவுகடாயினாள். எ - று.

இது "காமஞ்சிறப்பினும்" (1) என்பதனாற்கொள்க.
இதனால், தலைவற்குச் சூழ்ச்சி பிறந்தது.

(2) இதுவும் காலம்மயங்கிற்று. செல்லறீரத் திறனறியொருவன் என்பதும் பாடம்.

இது நீ நீ நீ என ஓரசைச்சீர் வந்து ஐஞ்சீரடிவந்த 1மண்டிலவாசிரியத்தானிற்று யாப்பின்வேறுபட்ட கொச்சகம். (12)

(130) நயனும் வாய்மையு நன்னர் நடுவு
மிவனிற் றோன்றிய விவையென விரங்கப்
புரைதவ நாடிப் பொய்தபுத் தினிதாண்ட
வரைசனோ டுடன்மாய்ந்த நல்லூழிச் செல்வம்போ
னிரைகதிர்க் கனலி பாடொடு பகல்செலக்
கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போற்
புல்லிருள் பரத்தரூஉம் புலம்புகொண் மருண்மாலை;
8 இம்மாலை;
ஐய ரவிரழ லெடுப்ப வரோவென்
கையறு நெஞ்சங் கனன்றுதீ மடுக்கும்;
11 இம்மாலை;
இருங்கழி மாமலர் கூம்ப வரோவென்
னரும்படர் நெஞ்ச மழிவொடு கூம்பும்;
14

இம்மாலை;
கோவலர் தீங்குழ லினைய வரோவென்
பூவெழி லுண்கண் புலம்புகொண் டினையும்;


1. தொல். கள. சூ. 20.

2. (அ) முதற்பொருள்களுள் காலம்மயங்கிவருமென்பதற்கு இச்செய்யுளை மேற்கோள்காட்டுவர் இளம்பூரணர்; தொல். அகத். சூ. 14 ‘திணை மயங்கு’(ஆ) நச்சினார்க்கினியரும் அச்சூத்திரவுரையில் “தொல்லூழி ...........வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ” என்னுமடிகளை மேற்கோள்காட்டி ‘நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும்

(பிரதிபேதம்) 1மண்டலவாசிரியத்தான்.