“வாயிலுசாவே தம்முளுரிய” (1) என்பதுவிதி. உழப்பாளைத்தொடுவழி யென்க. விடுவிழி தொடுவழி என்பன செயவெனெச்சக் குறிப்புச்சொல்லாகிய வழி என்னும் வினையெச்சம். | இதனால், வாயில்கட்குப் பெருமிதமென்னும் மெய்ப்பாடு பிறந்தது. | | (2) இஃது இடையிடை சொற்சீரடி வந்தகொச்சகம்.(13) |
131 | பெருங்கடற் றெய்வநீர் நோக்கித் தெளித்தென் றிருந்திழை மென்றோண் மணந்தவன் செய்த வருந்துயர் நீக்குவேன் போன்மற் பொருந்துபு பூக்கவின் கொண்ட புகழ்சா லெழிலுண்க | 5 | ணோக்குங்கா னோக்கி னணங்காக்குஞ் சாயலாய் தாக்கி யினமீ னிகன்மாற வென்ற சினமீ னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த நெய்த னெடுநார்ப் பிணித்தியாத்துக் கையுளர்வின் யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்பத் தாழா துறைக்குந் தடமலர்த் தண்டாழை வீழுச றூங்கப் பெறின்; | 12 | மாழை, மடமான் பிணையியல் வென்றாய் நின்னூசல் கடைஇயா னிகுப்பநீ டுங்காய் தடமென்றோ ணீத்தான் றிறங்கள் பகர்ந்து | 15 | நாணினகொ றோழி நாணினகொ றோழி யிரவெலா நற்றோழி நாணின வென்பவை வாணிலா வேய்க்கும் வயங்கொளி யெக்கர்மே லானாப் பரிய வலவ னளைபுகூஉங் கானற் கமழ்ஞாழல் வீயேய்ப்பத் தோழியென் மேனி சிதைத்தான் றுறை; |
1. தொல். செய். சூ. 200. 2. (அ) இச்செய்யுள் இடையிடையே சொற்சீரடி பல விரவி யாப்பின் வேறுபடவந்த கொச்சகமென்பதும் இவர் கருத்துப்போலும்; (ஆ) “நயனும் வாய்மையு நன்னர்நடுவுமென, அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியதுபோலுங் கொச்சகம்வருங்கால் ஒத்தாழிசையும் வண்ணகமும்போலத் தனிச்சொற் பெற்றும் பெறாதும் வரும்” என்பது பேராசிரியருரையிற் காணப்படுவது. தொல். செய். சூ. 155.
|