பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்821

(132). உரவுநீர்த் திரைபொர வோங்கிய வெக்கர்மேல்
விரவுப்பல் லுருவின வீழ்பெடை துணையாக
விரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளின மிறைகொள
முரைசுமூன் றாள்பவர் முரணியோர் முரண்டப
நிரைகளி றிடைபட நெறியாத்த விருக்கைபோற்
சிதைவின்றிச் சென்றுழிச் சிறப்பெய்தி வினைவாய்த்துத்
துறையகலம் வாய்சூழந் துணிகடற் றண்சேர்ப்ப;
புன்னையநறும்பொழிற் புணர்ந்தனை யிருந்தக்கா 
னன்னுதா லஞ்சலோம் பென்றதன் பயனன்றோ
பாயின பசலையாற் பகற்கொண்ட சுடர்போன்றாண்
மாவின தளிர்போலு மாணல மிழந்ததை;
12 பன்மலர்நறும்பொழிற் பழியின்றிப் புணர்ந்தக்காற்
சின்மொழி தெளியெனத் தேற்றியசிறப்பன்றோ
வாடுபு வனப்போடி வயக்குறா மணிபோன்றோ
ணீடிறை நெடுமென்றோ ணிரைவளை நெகிழ்ந்ததை;
16அடும்பிவரணியெக்க ராடிநீ தணந்தக்காற்
கொடுங்குழாய் தெளியெனக் கொண்டதன் கொளையன்றோ
பொறையாற்றா நுசுப்பினாற் பூவீந்த கொடிபோன்றாண்
மறைபிற ரறியாமை மாணாநோ யுழப்பதை;
எனவாங்கு;
21வழிபட்டதெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்
கழியுநோய்கைம்மிக வணங்காகி யதுபோலப்
பழிபரந் தலர்தூற்ற வென்றோழி
யழிபட ரலைப்ப வகறலோ கொடிதே.

இது வரைவு நீட்டித்துழிப் பகற்குறிவந்து நீங்குந் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி, அவனை நாணு நெஞ்சலைப்ப வரைவுகடாயது.

இதன் பொருள்.

(1) உரவுநீர்த் திரைபொர வோங்கிய வெக்கர்மேல்
விரவுப்பல் லுருவின வீழ்பெடை துணையாக


1. உரவுநீர். இந்நூற்பாக்கம் 791 : 4-ஆம் குறிப்புப்பார்க்க.