பக்கம் எண் :

850கலித்தொகை

சிறுதாயம் இட்டவன் மனம்போலே ஆக்கம்1பெருகினவள், நீ பிரிந்து வந்து வரைவேனென்று எமக்கறிவித்துப் பிரியக் கருதின நின்பொருட்டு அக்கவறு இருகாற் சிறுதாயம் இட வேண்டின அளவிலே ஒருகாற் சிறுதாயம் இடப்பட்டவனைப்போலே செறிந்த துயரிலே அழுந்தவோ? எ - று.

இது 2தகவாகாது காணெனக் கூறிப் பின்னும்.

ஆங்கு, அசை.

18 (1) கொண்டு 3பலர்தூற்றங் கௌவை யஞ்சாய்
தீண்டற் கருளித் திறனறிந் தெழீஇப்
பாண்டியஞ் செய்வான் பொருளினு
மீண்டுக விவணல மேறுக தேரே

எ - து: நீ பலரும் மேற்கொண்டு தூற்றும் அலருக்கு அஞ்சாய்; இதனைக் கைவிட்டு இவளை வரைந்துகொண்டு கூடுதற்கு அருள்பண்ணி, அதற்காந்திறத்தை அறிந்து எழுந்திருந்து தேரை ஏறுவாயாக; அங்ஙனம் வரைந்தால் 4இவள்நலம் உழவாடியாகி யிருப்பானி[ருவரி]டத்துப் பெரும்பொருளினும் ஈண்டுவதாக என வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

இஃது ஒத்தாழிசைக்கலி.

(137). அரிதே தோழிநா ணிறுப்பாமென் றுணர்தல்
பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே
பலவே யாமம் பையுளு முடைய
சிலவே நம்மோ டுசாவு மன்றி
லழலவிர் வயங்கிழை யொலிப்ப வுலமந்
தெழிலெஞ்சு மயிலி னடுங்கிச் சேக்கையி
னழலா கின்றவர் நக்கதன் பயனே;
மெல்லியநெஞ்சு பையுள் கூரத்தஞ்
சொல்லினா னெய்தமை யல்ல தவர்நம்மை
வல்லவன் றைஇய வாக்கமை கடுவிசை

‘விருத்தம்’ என வழங்கும் சொல்லின் சிதைவுபோலும்; அன்றி வித்தென்பது அம்சாரியை பெற்றுவந்ததெனினும் இயையும்; வித்தாயமென இச்செய்யுளுள் வருதலும் நோக்குக.

1. எதுகை நோக்கி ‘கோண்டு’ எனக்கொள்ளின், நீட்டல் விகாரமாம்.

(பிரதிபேதம்)1பெருகினவளணீபிரிந்து, 2தாவகதாது, தாவாகாது, 3 பழிதூற்றும் 4இவணலமும் வாடியாகி யிருப்பாளிருவரிடத்தும் பெறும் பொருளினுமீண்டுவதாக