பக்கம் எண் :

565

(பி - ம்.) 4 ‘பிள்ளைமறத்தோடு’ 6 ‘கெலலமல்’ 11 ‘கொனவல்’
18 ‘குறுமபடுநதொடகழிநீண்’

திணை - அது; துறை -பரிசிற்றுறை.

ஓய்மான்வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் (பி - ம்.நன்னாதன்)

(கு - ரை.) 1. "திருந்துகழ னோன்றாட்டண்ணிழி லேமே" (புறநா. 397 : 27) . வாழ்க்கையை யான்பெறுவேன்.

2. இசை - கீர்த்தி. நுவறலைஅவன் பெறுக.

3. தொழுவர் - தொழிலைச்செய்வோர் ; "நெல்லரியு மிருந்தொழுவர்", "நெல்லரிதொழுவர்" (புறநா. 24 : 1, 209 : 2) ; "நெல்லரிதொழுவர்" (நற். 195 : 6) . வாள் - அரிவாள்.

இவ்வடி,தொல். எச்ச. சூ. 19, ந. மேற்.

4. அரிய - அரிதற்கு. கல் செத்து - தீட்டுங் கல்லாக அறிந்து.

5. அள்ளல் -சேறு. புறம் - முதுகு. உரிஞ்சும் - தீட்டும்.

6. அமலுதல் -நெருங்குதல் ; "கண்பமல் பழனம்" (மலைபடு. 454) . புரவு -விளைநிலம்; புறநா. 260 : 9. இலங்கை - மாவிலங்கையென்னுமூர் ; புறநா. 176 : 6; "தொன்மாவிலங்கைக் கருவொடு பெயரிய, நன்மா விலங்கை மன்ன ருள்ளு,மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா, ளுறுபுலித் துப்பினோவியர் பெருமகன்" (சிறுபாண். 119-22)

3 - 6. "அன்னந்துயிலெழுப்ப வந்தா மரைவயலிற், செந்நெலரிவார்சினையாமை - வன்முதுகிற், கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்" (நள. சுயம்வர. 143)

8. குறுந்தாளேற்றை - ஆண்பன்றி. விளர் - வெண்மை ; விளரூன் : புறநா. 359 : 5, குறிப்புரை.

9. நாட்சோறுஈயா - காலையுணவை அளித்து.

9 - 10.ஈயாப் பசிதீர்த்தல்வல்லன்.

11. கொன்வரல் வாழ்க்கை - விடியற்காலத்தில் வந்துதடாரி வாசித்தலாலுண்டாகிய செல்வம் ; கொன் -விடியற்காலம்.விடியற்காலத்துக் கிணைப்பறைகொட்டித் தலைவன் புகழைப்பாடுதல் பொருநர்க் கியல்பு. (சீவக. 173, ந. மேற்.)

12.தண்டாது - அமையாமல்.

13. விண் தோய் -ஆகாயத்தை அளாவிய. 15. தூவா - உண்ணாத.

14 - 5. "தாயிறூவாக் குழவி போல" (புறநா. 4 : 18)

16. ஐது -மெல்லிது.

17. மங்குலின் - மேகம்போல.உடன் - ஒருங்கு.

ஊர் (18) வந்தனென் (14)

(379)