பக்கம் எண் :

566

380

தென்பவ்வத்து முத்துப் பூண்டு
வடகுன் றத்துச் சாந்த முரீஇ
........................ங்கடற் றானை
இன்னிசையவிறல்வென்றித்
5தென்னவர்வயமறவன்
மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து

நாறிதழ்க்குளவியொடு கூதளங் குழைய
வேறுபெ......................................த்துந்து
தீஞ்சுளைப்பலவி னாஞ்சிற் பொருநன்

10துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச்சேய்மையன்
நட்பெதிர்ந் தோர்க்கே யங்கைநண்மையன்
வல்வேற் கந்த னல்லிசை யல்ல
...................த்தார்ப்பிள்ளையஞ் சிறாஅர்
அன்ன னாகன் மாறேயிந்நிலம்
15இலம்படு காலையாயினும்
புலம்பல்போ யின்று பூத்தவென் கடும்பே.

(பி - ம்.) 5 ‘வயன்மறவர்’ 7 ‘கூதுளங்’ 10 ‘யங்கையநன்மையன்’, ‘யங்கையண்மையன்’, ‘யாங்கனீ நன்மையை’ 14 ‘அள்ளனாகன்’ 15 ‘இளம்படுகாளையாயினும்’

திணை - அது; துறை -இயன்மொழி.

நாஞ்சில்வள்ளுவனைக்கருவூர்க்கதப்பிள்ளை.

(கு - ரை.) 1.பவ்வம் - கடல் ; 'தென்கடன் முத்தும்' (பட்டினப். 189 ;சிலப். 8 : 19) ; 'வெண்டிரைத் தென்கடன் முத்தும்' (தஞ்சை. 93)

2.வடகுன்றம் - இமயம். சாந்தம் - சந்தனம். உரீஇ - உரிஞ்சி ;'வடவர்தந்த வான்கேழ்ச் சந்தம்' (அகநா. 340 : 16)

4.விறல் வென்றி - வென்றிவகை பலவற்றுட் போர்வீரத்தாலுண்டாகியவெற்றி.

5. தென்னவர் வயமறவன் : 'திருவீழ் மார்பிற்றென்னவன் மறவன்' (அகநா. 13 : 6)

6.முத்தாகுந்து - முத்தாகும் ; இஃது உம்மீற்றுப்பெயரெச்சம் ;உம், உந்தாயிற்று.

7. குளவி -மலைமல்லிகை. கூதளம் - கூதாளி ; இந்த இரண்டும் சேர்த்துவழங்கப்படும் ; 'கூதளங் கவினிய குளவி முன்றில்' (புறநா. 168 : 12) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.