பக்கம் எண் :

568

15இலம்பாடகற்றல் யாவது புலம்பொடு
தெருமர லுயக்கமுந்தீர்க்குவோ மதனால்
இருநிலங் கூலம் பாறக் கோடை
வருமழைமுழக்கிசைக் கோடிய பின்றைச்
சேயை யாயினுமிவணை யாயினும்
20இதற்கொண்டறிநை வாழியோ கிணைவ
சிறுநனி, ஒருவழிப்படர்கென் றோனே யெந்தை
ஒலிவெள் ளருவி வேங்கடநாடன்
உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும்
அறத்துறையம்பியின் மான மறப்பின்
25றிருங்கோ ளீராப்பூட்கைக்
கரும்ப னூரன் காதன் மகனே.

(பி - ம்.) 1‘முணைஇயவினிதென’ 2 ‘பாஅறபெய்தவும்’ 8 ‘துணரியதுளவாகி’ 9 ‘பயம்பகர்பறியா’, ‘முதுபாட்’ 10 ‘தாங்கினி தீயா’ 11 ‘புறங்கடைக்கொன்றி’ 12 ‘சிதாஅரளமபிற............தடாரிடை’ 13 ‘ஊனுகிர்வலந்த தென்கண்’ 20 ‘டறிகை’ 24 ‘பிறப்பினறிருககொளளாப’

திணையும் துறையும் அவை.

கரும்பனூர்கிழானை நன்னாகனார்.

(கு - ரை.) 1. ஊன் - இறைச்சி ; ஊண் - அடிசில். முனையின் - வெறுத்தால்.

2. பாகு - வெல்லப்பாகு ; "காரகற் கூவியன் பாகொடு பிடித்த, விழைசூழ் வட்டம்" (பெரும்பாண். 377 - 8)

3. அளவுபு கலந்து - நன்றாகக்கலந்து.

1 - 3. "சுவைய, வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ" (பொருந. 107 - 8)

4. விருந்து - புதுமை. ஆற்றி - பசியைத் தணித்துக்கொண்டு.

5. சென்மோ - வருவாயாக.

1 - 5. "ஊனு மூணு முனையினென்னும் புறப்பாட்டினுள் ‘சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென’ என்பதனையும் தன்மைக் கண் ‘மோ’ வருமென இவ்வாறு அமைத்தலுமொன்று ; அன்றிப் பெரும! எம்விழவுடை நாட்டே நீ செல்லென்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக்கூற அப்பொருநனும் பாட்டுடைத்தலைவனை நோக்கிப் பின்னும் கூறினானாகப் பொருள் கூறுதலுமொன்று" (தொல். இடை. சூ. 27, .)

6. அறியுநமாக - அறிவேமாக.

6 - 7 " நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி, துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி" (மலைபடு. 559 - 60)