பக்கம் எண் :

569

8. துணரியது - குலைகொண்டது ; "பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனி" (பொருந. 191 - 2) . ஊழ்த்து -செவ்வியழிந்து.

9. பகர்வு - கொடுத்தல். அரில் - சிறுதூறுகள். முதுபாழில்.

12. சிதாஅர் வள்பு - துண்டித்த வார் ; "சிதாஅர் வள்பினென்றெடாரி" (புறநா. 376 : 4)

14. அரலை - குற்றம். பாணியின் - பாட்டால்.

17. கூலம் - பலபண்டம். 19. இவணை - இவ்விடத்துள்ளாய்.

23. உறுவர் - பெரியோர்.

24. அறத்துறையம்பி - தருமவோடம் ; "பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம், அறவிநாவாய்" (மணி. 11 : 24 - 5)
மகன் (26) படர்கென்றோனே (21)

மு. தொல். புறத்திணை. சூ. 30, இளம். ; சூ. 30, ந. மேற்.

(381)

382

கடற்படை யடற்கொண்டி
மண்டுற்ற மலிர்நோன்றாட்
டண்சோழ நாட்டுப் பொருநன்
அலங்குளை யணியிவுளி
5நலங்கிள்ளி நசைப்பொருநரேம்
பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம்
அவற்பாடுது மவன்றாள் வாழியவென
நெய்குய்ய வூனவின்ற
பலசோற்றா னின்சுவைய
10நல்குரவின் பசித்துன்பினின்
முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
யானும், ஏழ்மணியங் கேழணியுத்திக்
கட்கேள்விக் கவைநாவின்
நிறனுற்ற வராஅப்போலும்
15வறனொரீஇ வழங்குவாய்ப்ப
விடுமதி யத்தை கடுமான் றோன்றல்
நினதே, முந்நீ ருடுத்தவிவ் வியனுல கறிய
எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல்
20எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறு நடுங்க வேத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.