பக்கம் எண் :

570

(பி - ம்.) 2 ‘மணடறற மறனொனறாட’, ‘மண்டறற மலிறநொன’

3 ‘பொருநன வலஙகுளை’ 6 ‘வேணடேமயறபாடுதும்’ 9 ‘னினஞ சுவையநல் குரவின பசித்துன்பவென்பநின்’ 12 ‘ யானுமெமணி’ 13 ‘நாவிறறூநிறத்தவராஅப்’, ‘நாவிறறூ நிறத்தவாஅப்’ 15‘வயங்குவாயபப’, ‘வமஙகுவாயபப’ 17 ‘விலவயினுலகு’ 18 ‘கிடைகாழனன வென்றெண்கண்’ 21 ‘வெநது’, ‘வோதுவென்’

திணை - அது; துறை - கடைநிலை

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார்.

(கு - ரை.) 1. கொண்டி - பொருளின்மிகுதி ; "கொண்டி பெறுகென் றோனே" (புறநா.390 : 23)

2. மலிர் - நீரூற்று; "மணலாடு மலிர்நிறை" (ஐங்குறு. 15)

3. பொருநன் - உவமிக்கப்படுபவன்; "போர்மிகு பொருந" (முருகு. 276) ; "வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" (மதுரைக். 42) ; அரசனுமாம்.

5. பொருநரேம் - பொருநராக உள்ளேம். 6. பிறரைப் பாடி.

7. வாழியவென அவனைப்பாடுவேம். 9. சோற்றான் - சோற்றோடு.

12. ஏழ்மணி - எழுச்சியையுடைய மணி. உத்தி - படப்பொறி.

13. கட்கேள்வி - கண்ணாற்கேட்டல். கவைநா - பிளவுப்பட்ட நாக்கு.

15. வறன் - வறுமை. வழங்கு வாய்ப்ப - பிறர்க்கு யாம் கொடுத்தல் கைகூடும்படி.

14 - 5. வறுமைக்கு அராவின் விடம் உவமம்.

16. மதியும் அத்தையும் அசைநிலைகள். தோன்றல் : விளி.

17. நினதாகிய உலகு அறிய.

18. கிடைக்காழ் - நெட்டியின் காம்பு. எனதாகிய கிணையென்க.

18 - 9. கிணையினிடத்து அதனையடிக்கும் சிறுகோல் கட்டப்பட்டிருக்கும் ; "நுண்கோற் சிறுகிணை" (புறநா. 383 : 3)

21. கேட்டொறும் - கேட்குந்தோறும்.

18 - 21. ஒப்பு. நற்.100 : 10 - 12.

22. வென்ற தேர் - ஏனையோரை வென்ற தேரையுடைய. பிறர் - அயலரசர். வேத்தவையான் - இராசசபைக்கண்.
அறிய (17) ஏத்துவென் (21)

(382)

383

ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்