5 | தன்னிலை யறியுந னாக வந்நிலை இடுக்க ணிரியல் போக வுடைய கொடுத்தோ னெந்தை கொடைமேந் தோன்ற ................னாமருப்பாக வெல்லும் வாய்மொழிப் புல்லுடைவி...... | 10 | பெயர்க்கும் பண்ணற் கெடடீரொமககிரென வினைப்பக டேற்ற மேழி கிணைத்தொடா நாடொறும் பாடே னாயி னானா மணிகிளர் முன்றிற் றென்னவன் மருகன் பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானை | 15 | அண்ணல் யானை வழுதி கண்மா றிலியரென் பெருங்கிளைப் புரவே. |
(பி - ம்.) 3. ‘இரும்பிறை கிணைமகன்’ 5 ‘யறியினனாக’ 6 ‘போத’ 10 ‘பெயாககுமபணணறகெடடீரொ மககீரென’ 11 ‘வினைப் பகடெததுமேனி தினைததொடர்’, ‘வினைப்பகடெததுமெந்திணைந தொடா’ ‘திணைத்தாடா’ 12 ‘பாடெனாபினொனாகநாணா’ 13 ‘மணி கிளாமூககிறறெனனவன’ 15 ‘யானைவழுகணமாறிலியா’ திணை - அது; துறை - இயன்மொழி. சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார். (கு - ரை.) 1. வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் தீய நிமித்தம். இந்நிகழ்ச்சி மழை பெய்யாமைக்கும் வற்கடம் உண்டாவதற்கும் காரணமென்பர் ; “மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்” (புறநா. 117 : 1 - 2) , “வசையில் புகழ் வயங்குவெண்மீன், திசைதிரிந்து தெற்கேகினும், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான்பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி” (பட்டினப். 1 - 6) , “வறிதுவடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப”, “நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப”. (பதிற். 24 : 24 - 5, 69 : 13 - 4) ; “கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும், ............ காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை” (சிலப். 10 : 102 - 8) 3. கிணைமகன் - கிணைப்பறை வாசிப்பவன் ; கிணையன். பெரும் பெயர் - பெரும்புகழ். 5. தன்னிலை - தன்னுடைய மேம்பட்ட நிலை. 6. இரியல் போக - கெட. உடைய - தன்பால்உள்ளனவற்றை.
|