10. பண்ணன் : இப்பாட்டுடைத்தலைவன். 11. வினைப்பகடு - உழவுத்தொழிற்குரிய எருது ; கடா. ஏற்றம் - நீர் இறைத்தற்குரியது ; இப்பெயர் ஏத்தமெனவும் வழங்கும். 13. மணி - ஆராய்ச்சிமணி ; “வாயிற் கடைமணி நடுநா நடுங்க, ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்” (சிலப். 20 : 53 - 5) . மருகன் - வழித்தோன்றல். 14. பிணித்தல் - கட்டுதல். 16. கண்மாறிலியர் - கண்ணோட்டம் ஒழிவானாக. புரவு - காத்தல.் (388) 389 | நீர்நுங்கின் தண்வலிப்பக் கானவேம்பின் காய்திரங்கக் கயங்களியுங் கோடையாயினும் ஏலா வெண்பொன் போருறு காலை | | 5 | எம்மு முள்ளுமோ பிள்ளையம் பொருநன் என்றீத் தனனே யிசைசா னெடுந்தகை இன்றுசென் றெய்தும் வழியனு மல்லன் செலினே காணா வழியனு மல்லன் புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து | | 10 | குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும் கல்லிழி யருவி வேங்கடங் கிழவோன் செல்வுழி யெழாஅ நல்லேர் முதியன் ஆத னுங்கன் போல நீயும் பசித்த வொக்கற் பழங்கண் வீட | | 15 | வீறுசா னன்கல நல்குமதி பெரும ஐதக லல்குன் மகளிர் நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே. |
(பி - ம்.) 1 ‘கவைநிறபக’ 4 ‘போகுறு.......பொருநவென்று’ 5 ‘பொருநவென்று’ 13 ‘ஆறுநுஙகன்’, ‘ஆகுநுங்கன’ 14 ‘பசிதது வொஙககறபழங’ 15 ‘பெருமவைததல’ திணையும் துறையும் அவை. ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார். (கு - ரை.) 1. நீர்நுங்கு - நீரையுடைய பனநுங்கு. வலிப்ப - நீரின்றி வற்ற. 2. திரங்க - உலர ; “திரங்குமர னாரிற் பொலியச் சூடி” (மலைபடு. 431)
|