பக்கம் எண் :

17

    
 தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (6)

     திணையும் துறையு மவை; துறை - வாழ்த்தியலுமாம்.
பாண்டியன பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார்
பாடியது.

     உரை : வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும்  - வடக்கின்
கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெனாஅது
உருகெழு  குமரியின்  தெற்கும் -  தெற்கின்  கண்ணது  உட்குந்
திறம்பொருந்திய கன்னியாற்றின்  தெற்கும்; குணாஅது கரை பொரு
தொடு கடற் குணக்கும் -கீழ்க்கண்ணது கரையைப்  பொருகின்ற
சகரரால்  தோண்டப்பட்ட சாகரத்தின்  கிழக்கும்;   குடாஅது
தொன்று   முதிர்    பௌவத்தின்   குடக்கும் - மேல்கண்ணது
பழையதாய் முதிர்ந்த  கடலின்  மேற்கும்;  கீழது -  கீழதாகிய;
முப்புணர்  அடுக்கிய முறை முதற் கட்டின் -நிலமும் ஆகாயமும்
சுவர்க்கமுமென  மூன்றுங்  கூடிய  புணர்ச்சியாக அடுக்கப்பட்ட
அடைவின்கண்  முதற்கட்டாகிய;   நீர்நிலை நிவப்பின் கீழும் -
நீர்நிலைக்கண் ஓங்கிய  நிலத்தின்  கீழும்; மேலது  ஆன்நிலை 
உலகத்தானும்  -   மேலதாகிய   கோ லோகத்தின்கண்ணும்;
ஆனாது - அமையாது; உருவும் புகழும்ஆகி  - உட்கும்  புகழுமாக; 
விரிசீர்த்  தெரிகோல் ஞமன்ன் போல -   பரந்த   அளவையுடைய
பொருள்களை  ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய் போல; ஒரு
திறம் பற்றல் இலியர் - ஒருபக்கம்  கோடாதொழிக; நின்  திறம்
சிறக்க - நினது படை குடி முதலாகிய கூறுபாடுகள்  சிறக்க; 
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர்  தேஎத்து  -  போர்  செய்தற்கு
மாறுபட்ட பகைவர் தேயத்தின்  கண்ணே;  கடற்படை  குளிப்ப
மண்டி -  நினது கடல்போலும்  படை  மேல்  விழுந்து உள்புக
மிக்குச் சென்று; அடர்ப்புகர்ச்  சிறுகண்  யானை  செவ்விதின் ஏவி
- அடர்ந்த புகரினையுடைய சிறுகண் யானையைத் தடையின்றி நேரே
யேவி; பாசவல்  படப்பை  ஆரெயில்  பல  தந்து - பசிய
விளைநிலப்  பக்கத்தையுடைய அரிய மதிலரண்  பலவற்றையுங்
கொண்டு; அவ்  வெயில்  கொண்ட  செய்வுறு   நன்கலம்  -
அவ்வரணின்கட்   கொள்ளப்பட்ட  அழகுபடச்  செய்த   நல்ல
அணிகலங்களை; பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி - பரிசிலர்க்கு
வரிசையின் வழங்கி; நின் குடை - நினது கொற்றக்குடை; முனிவர்
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு - முனிவராற் பரவப்படும்
மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம்
வருவதற்கு; பணியியர்  -  தாழ்க;  பெரும-;  நின்  சென்னி -
நினது முடி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை யெதிரே - மிக்க
நான்கு வேதத்தினையுடைய   அந்தணர்   நின்னை  நீடு வாழ்கவென்
றெடுத்தகையின் முன்னே; இறைஞ்சுக -வணங்குக; இறைவ-; நின் கண்ணி - நினது