| 25. | எம்மோ ராக்கக் கங்குண்டே | | மாரிவானத்து மீனாப்பண் விரிகதிர வெண்டிங்களின் விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் | 30. | நிரைசா னன்கல னல்கி | | உரைசெலச் சிறக்கவவன் பாடல்சால் வளனே. |
திணையுந் துறையு மவை. வாட்டாற் றெழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
உரை: கிழ்நீரால் மீன் வழங்குந்து - நீரின் கீழே மீன்கள் சென்றுலவும்; மீ நீரால் கண்ணன்ன மலர் பூக்குந்து - நீரின் மேற்பரப்பில் குவளையுந் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலீர்ந்திருக்கும்; கழி சுற்றிய விளைகழனி - கழிகளாற் சூழப்பட்ட நெல் விளைந்து கிடக்கும் வயலின்கண்; அரிப்பறையால் புள்ளோப்புந்து - அரித்த ஒசையையுடைய பறையை முழக்குவதால் கதிர் கவர வரும் கிளி முதலிய புள்ளினங்கள் வெருட்டியோட்டப்படும்; நெடுநீர் தொகூஉம் மணல் தண்கால் - நீர்மிக்க கடற்கரைக்கண் குவியும் மணலை யள்ளித் தூவும் குளிர் காற்றினால்; மென்பறையால் புள் இரியுந்து - மெல்லிய சிறகுகளோடு கூடிய புள்ளினங்கள் நீங்கிச் செல்லும்; நனைக் கள்ளின் மனைக் கோசர் - மலர்களிடத்திற் பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோச ரென்பார்; தீந்தேறல் நறவு மகிழ்ந்து - தீவிய கட்டெளிவை யுண்டு களி்ப்பேறி; தீங்குரவைத் கொளைத் தாங்குந்து - இனிய குரவையாடுமிடத் தெழும் பாட்டுக்கள் இசைக்கப்படும்; நீர்வள வாட்டாற்று எழினியாதன் - நீர்வளஞ் சிறந்த வாட்டாறென்னும் ஊக்கம் இல்லாதார்க்கு வலியாகித் துணைசெய்வன்; கேளிலோர்க்குக் கேளாகுவன் - அறிவு வழங்கும் கேளிரை யில்லாதார்க்குக் கேண்மையுற்று அறிவுத் துணை செய்வன்; கழுமிய வென்வேல் வேள் - பிற படையொடு கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவனாவன்; கிணையேம் - யாம் அவனுடைய கிணைப்பொருநராவோம்; பெரும - பெருமானே; கொழுந்தடிய சூடு என்கோ - அவன் எமக் களித்த கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்வேனோ; குறுமுயலின் நிணம் பெய்தந்த - குறுமுயலின் தசை விரவித் தந்த, நறுசெய்ய சோறு என்கோ - நறிய நெய்யையுடைய சோற்றைச் சொல்வேனோ; திறந்து |