| கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து | 15. | போதறியேன் பதிப்பழகவும் | | தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ மறவர் மலிந்ததன்..... கேள்வி மலிந்த வேள்வித் தூணத் | 20. | திருங்கழி யிழிதரு மார்கலி வங்கம் | | தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத் துறைதொறும் பிணிக்கும் நல்லூர் உறைவின் யாணர் நாடுகிழ வோனே. |
திணை: அத. துறை: இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: மாக விசும்பின் வெண்டிங்கள் - மாகமாகிய விசும்பின்கண் நிலவும் வெண்மதியம்; மூவைந்தால் முறைமுற்ற - பதினைந்துநாள் முறையே முதிர; கடல் நடுவண் கண்டன்ன - கடலின் நடுவின் அதனைக் கண்டாற் போன்ற; என்இயம் இசையா மரபேத்தி - எனது இயமாகிய தடாரிப்பறையை யறைந்து முறையே அவனுடைய புகழ் பரவினேனாக; கடைக்கங்குலால் - இரவின் கடையாமமாகிய விடியற்காலத்தில்; பலர் துஞ்சவும் தான் துஞ்சான் - பலர் உறங்கவும் தான் மட்டில் உறங்கானாய்;உலகு காக்கும் உயர் கொள்கை - உலகத்தைக் காக்கும் உயர்ந்த கொள்கையையுடைய; எந்தை - எம் தலைவன்; கடைத் தோன்றிய என் தெண்கிணைக் குரல் கேட்டோன் - தன் நெடுமனை முற்றத்தில் நின்று இசைத்த எனது தெளிந்த - கிணைப்பறையின் ஓசையைக் கேட்டாய்; கேட்டற்கொண்டும் கேட்டதனால்;வேட்கை தண்டானது - என்பால் உண்டான அருள் குறையாமல்; தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி - பழைமையுற்றுச் சிதர்ந்த பீறிய என அரைிலிருந்த உடையைக் களைந்து போக்கி;கலிங்கம் அளித்திட்டு - புத்தாடை தந்து உடுப்பித்ததுடன்; என் அரை நோக்கி - அதனை யணிந்து பொலியும் என் அரையைத் தான் பார்த்து மகிழ்ந்து; மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம் - மிகப்பெரிய சிறப்பினையுடைய வீறமைந்த நல்ல கலன்களை;...நாரரி நறவின் நாண்மகிழ் தூங்குந்து - நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுண்ட நாடோறும் மகிழ்ந்சிமிகும்;... பதிப்பழகவும் போதறியேன் - அவன் ஊர்க்கண்ணேிருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்; தன்பகை கடிதலன்றியும் - தன்னை |