பக்கம் எண் :


466காஞ்சிப் புராணம்


பின்றாழ் சடிலத் திறையோய்பிழை ஒன்றும் இல்லா
என்றாதை யாகுஞ் சமதக்கினி என்னும் அஞ்சும்
வென்றான்றனை யேகய வேந்தன் அருச்சு னன்றான்
கொன்றான் அவனைக் குலத்தோடறக் கொன்ற ழித்து.   55

     ‘பின்றாழ் சடைமுடிப் பெருமானே! சிறு பிழையும் செய்யாத எனக்குத்
தாதையாகும் சமதக்கினி முனிவரைக் கீழ்மைக்குணமுடைய காத்த
வீரியார்ச்சுனன் என்னும் அரசன் கொன்றனன். அவனை அவன்
குலத்தோடும் கொன்றழித்து,

     ‘பின்றாழ் சடைமேல்’ (திருநறையூர்ச் சித்தீச்சரம்)

எந்தைக்கவர் தங்குரு திப்புனல் அங்கை ஏந்தி
நிந்திப்பறு தர்ப்பணம் ஆற்றிய சிந்தை நேர்ந்தேன்
அந்தத்திறல் உன்அடி யேற்கருள் என்ன ஐயன்
வந்திக்கும் மழுப்படை மீது கடைக்கண் வைத்தான்.   56

     ‘அவர் தம்முடைய செந்நீரைக் கொண்டு என் தந்தைக்குப் பழிப்
பில்லாத தருப்பணஞ் செய்ய விரும்பினேன். அதற்கு வேண்டும் ஆற்றலை
அடியேனுக் கருளென்று வேண்டப் பெருமானார் யாவரானும் போற்றப்
பெறும் மழுப்படை மீது திருக்கடைக்கண் சாத்தினர்.

திருஉள்ளம் உணர்ந்து கணிச்சி திருந்து தன்கூற்
றொருதிண்படை ஆக்க உவற்கது நல்கி எங்கோன்
பெருவெண்களி றாளி தடுப்பினும் பேண லாரைச்
செருவின்கண் விடாது செகுத்தனை வெற்றி கொள்வாய்.  57

     பெருமானின் திருக்குறிப்பினை அறிந்து அம்மழுப்படை, தன்
கூற்றினின்றும் ஓர் மழுவினைத் தோற்றுவிக்க இராமனுக்கு எமது பெருமான்
அதனை வழங்கி ‘இந்திரனே பகைத்தெதிர் நிற்பினும் பகைவரைப்
போர்க்களத்தில் அழித்து வெற்றி கொள்வாயாக,’

பரசுப்படை பெற்றனை அப்பெயர் பற்றி வாழ்கென்
றரவச்சடை அங்கணன் இன்னருள் செய்ய அன்னோன்
மரபிற்றொழு திவ்விலிங் கத்து மகிழ்ந்து வாழ்வாய்
புரம்அட்டருள் புண்ணிய இப்புனல் யாறுமூழ்கி.       58

     மேலும் பரசாயுதம் பெற்றமையின் பரசுராமன் என்னும் பெயர் பெற்று
வாழ்க” என அரவம் பூண்ட சடை முடியினையுடைய அங்கணர் இனிய
அருளைப் புரிய, அப்பரசிராமர் விதிப்படி வணங்கி ‘‘முப்புரத்தை அழித்து
நல்லோர்க்கருளும் புண்ணியரே! இவ்விலிங்கத்துள் வீற்றிருந் திருப்பாலியாற்று
நீரில் மூழ்கி”

கற்றைக்கதிர் வெள்ளொளி கான்றிருட் கட்ட றுக்குங்
கொற்றச்சசி நாள்முதல் நாள்களிற் கொள்ளும் என்பேர்
பற்றிப்பயில் இவ்விலிங் கம்பணிந் தன்பர்க் கேன்ற
தற்றைப்பகல் நல்குநர் எய்துக ஆக்கம் வீடு.        59