வேனில்
வரவு
10. |
நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை |
|
சரிந்த காதற் றடையில தாகவே |
|
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் |
|
விரிந்த தின்னிள வேனிற் பருவமே. |
(இ-ள்.)
நெரிந்த நுண் குழல் நேரிழையாருழை-மடிந்துசுருண்டுள்ள நுண்ணிய கூந்தலையும் நேர்மையுள்ள
(அழகிய) அணிகலன்களையுமுடைய மகளிர்பால் சரிந்த காதல்-அடைந்த காதல், தடையிலாதாக
- இடையூறின்றி ஒழுக வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்துகட்டிய வெவ்விய
வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன்(இன்பத்தில்) தங்கியிருந்த நாளில், இன் இளவேனிற்
பருவம் விரிந்தது - இன்பந்தரும் இளவேனிற்பருவம் வந்து பரவியது. (எ-று,)
மன்னவன் நேரிழையாருழை காதல் தடையிலாதாகவைகும் நாளில்,
இளவேனில் வந்தது என்க.
காதலெல்லாம் நேரிழையாருழையே சேர்ந்திருத்தலை ‘சரிந்த’
என்றார். வைகுதல்-தங்குதல்;கழிதலுமாம். “வைகனாளும் வைகின்றே” (சீவக.156.) என்பது காண்க. (3)
வசந்தமன்னனை வரவேற்றல்
11. |
கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன |
|
வாங்கு வாகை வளைத்தன சாமரை1 |
|
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி |
|
பாங்கு வண்டொடு பாடின தேனினம். |
(இ-ள்.)
கோங்கு-கோங்குமரங்கள், (அவ் வயந்தமன்னனுக்குத் தம் மலர்களாகிய), பொற்குடைகொண்டு-பொன்குடையைக்
கொண்டு, கவித்தன; வாகை - வாகை
|