பக்கம் எண் :

Yasodara Kavium

- 17 -

வேனில் வரவு

10.  நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை
  சரிந்த காதற் றடையில தாகவே
  வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
  விரிந்த தின்னிள வேனிற் பருவமே.

(இ-ள்.) நெரிந்த நுண் குழல் நேரிழையாருழை-மடிந்துசுருண்டுள்ள நுண்ணிய கூந்தலையும் நேர்மையுள்ள (அழகிய) அணிகலன்களையுமுடைய மகளிர்பால் சரிந்த காதல்-அடைந்த காதல், தடையிலாதாக - இடையூறின்றி ஒழுக வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்துகட்டிய வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன்(இன்பத்தில்) தங்கியிருந்த நாளில், இன் இளவேனிற் பருவம் விரிந்தது - இன்பந்தரும் இளவேனிற்பருவம் வந்து பரவியது. (எ-று,)

மன்னவன் நேரிழையாருழை காதல் தடையிலாதாகவைகும் நாளில், இளவேனில் வந்தது என்க.

காதலெல்லாம் நேரிழையாருழையே சேர்ந்திருத்தலை ‘சரிந்த’ என்றார்.  வைகுதல்-தங்குதல்;கழிதலுமாம். “வைகனாளும் வைகின்றே” (சீவக.156.) என்பது காண்க.  (3)

வசந்தமன்னனை வரவேற்றல்

11.  கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
  வாங்கு வாகை வளைத்தன சாமரை1
  கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
  பாங்கு வண்டொடு பாடின தேனினம்.

(இ-ள்.) கோங்கு-கோங்குமரங்கள், (அவ் வயந்தமன்னனுக்குத் தம் மலர்களாகிய), பொற்குடைகொண்டு-பொன்குடையைக் கொண்டு, கவித்தன; வாகை - வாகை

 

1 சாய்மறை.