அல்லல்பட்ட
முஸ்லிம்கள்
அபிசீனியாவில்
அடைக்கலம்
புகுவதாயினர்
என்றாலும் பகைவர்
கொண்ட
எண்ணத்தில்
மீள்வ தற்கே
அண்ணலோர்
வழியைத் தேடி
ஆய்ந்திட
லானார் நெஞ்சே
தம்முடை நண்பர்
கட்குத்
தக்கவோர்
காப்ப ளிக்க
செம்மைசேர்
அண்ணல் செய்த
சீர்வழி
கேளாய் நெஞ்சே
அண்மையில் இருந்த
நாடாம்
அபிசீனி
யாவில் வாழ
வண்மைசேர்
*நஜ்ஜா ஷீபால்
அனுப்பியே
மனம்நி றைந்தார்
*நஜ்ஜாஷி
- அபிசீனிய நாட்டு
மதிநுட்பம்
வாய்ந்த மாமன்னர்
அதிகத்துன் பத்தைப்
பெற்றே
அல்லலில்
ஆழ்ந்த மக்கள்
பதிவிட்டு, உறவை
விட்டுப்
பிரிந்திட
லானார் நெஞ்சே
|