திருவிருத்தமும், "வஞ்சநமன்
வரதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும் அஞ்சி
யுனையடைந்தே னையா பராபரமே" என்ற தாயுமானார் பாடலும் காண்க.
மாலும்
நான்முகனும் காணா வடிவு - விட்டுணுவும் பிரமனும்
அடியும் முடியும் காணமாட்டாது கீழும்மேலும் நீண்டிருந்த பெரிய
அழற்றூணுருவம்.
காணா
வடிவுகொண்டு எதிரே வந்து - காணமுடியாது நின்றவர்
காணுமாறுள்ள தோர் வடிவுகொண்டு தாமே எதிரில்வந்து. ஆணவ மறைப்பு
உள்ளவழிக் காணா வடிவாய் நின்றதும், ஆணவ நீங்கித் தானற்றவழி
எதிர்வந்ததும் ஆம் என்று குறிக்கப் பெருந்தேவர்களும் பெருமுயற்சி
செய்தும் காணவொண்ணாதவர் தாமே வெளிவருவர் என்றார். "கனவிலுந்
தேவர்க் கரியாய் போற்றி, நனவிலு நாயேற் கருளினை போற்றி" என்பனவாதி
எண்ணிறந்த தமிழ்மறைகள் காண்க.
பயங்கெடுத்
தருளும் ஆற்றல் ... எதிரேவந்து - செற்றார் -
இங்குக் காணும் வடிவுகொண்டு எதிர்வந்தது அடியவர்க்குப் பயம்போக்கி
அருள்செய்யும் பொருட்டேயன்றிக் காலன் காணும்படியாகவன்று என்பது.
அவனும் காண வந்தனரேயெனின் நெல்லுக்கு இறைத்தநீர்
புல்லுக்குமாவதுபோல அவனும் கண்டான் என்க. ஆனால் அது பாலனுக்குப்
பயங்கெடுத்து அருளும் வடிவமாயிருந்தது. காலனுக்கு அதுவே
உதைத்துருட்டிச் சங்கரிக்கும் பயங்கொடுக்கும் வடிவமாயிருந்தது.
எதிர்வருதல் அடியார்க்கும், செறுதல் அல்லார்க்குமாக நின்றது.
ஒரேநிலையில்இவ்விரண்டு தன்மைகளும் நின்ற பெருமையை
நக்கீரதேவநாயனார் கோபப்பிரசாதம் (பதினொராந் திருமுறை) என்ற நூலில்
"மறைபயில் மார்க்கண் டேயர்க் கருளியும்"
எனவும், "மறிகட லுலகின்
மன்னுயிர் கவருங், கூற்றுவன்றனக்கோர் கூற்றுவனாகியும்" என்றும்
பாராட்டினர். இவ்வாறு உதைபட்டபோது அதனால்வருந்துதலின்றிப் பிரம
விட்டுணுக்களுக்கும் காணக்கிடைக்காத திருவடியை யான் அறியப்பெற்றேன்
என்று காலன் இறுமாந்தனன் என்னும் இக்கருத்தையே அப்பர் சுவாமிகள்
"மேலு மறிந்தில னான்முகன்மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன்
மாலுற்ற தேவழி பாடுசெய்யும், பாலன்
மிசைச்சென்று பாசம் விசிறி
மறிந்தசிந்தைக், கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே" என்ற
திருவிருத்தத்தினுள் நகைச்சுவைபட அருளிய அழகு காண்க.
இத்தேவாரத்திருவாக்கினை நினைவூட்டி ஆசிரியர் பாலனாம்
என்றும்,
வழிபாடுசெய்யும் காரணத்தால் எதிர்வந்தார் என்ற கருத்தைக் குறிக்கப் பற்ற
என்றும், நான்முகன் - மாலுமறிந்திலன் என்றதனை மாலு
நான்முகனுங்
காணா என்றும், கூறியவாற்றால் "முன்னோர் மொழிபொருளே யன்றி
யவர்மொழியும், பொன்னேபோற் போற்றுவம்" என்றபடி எடுத்துக் காட்டிய
அருமை நோக்குக. பற்ற எதிர்வந்து செற்றார் -
பற்றினால் வெளிவருவர்,
பற்றில்லா வழி வெளிப்படார் என்று இறைவனது அருளையும் அதனை
யடையும் சாதனத்தையும் குறித்த நயமும் காண்க. "மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான், உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே" என்ற கருத்தும் இது.
மாலு நான்முகனும் பற்றில்லாது
திருவடியைத் தேடியமையால் வெளிப்படாது, பின்னர் இறைஞ்சியபோது
வெளிப்பட்டனர் என்பதும், பற்றும் வழிகள் இவை யிவையாம் என்பதும்
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையினுள் அப்பர் சுவாமிகள் பலவாற்றானும்
வற்புறுத்தி அழகுபட அருளியது காண்க. "நன்றுநகு நாண்மலரா னல்லிருக்கு
மந்திரங்கொண், டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற
னோங்குயிர்மேற்,
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்" (திருஞான - தேவாரம்
பண் - பழந்தக்கராகம் - திருக்கோளிலி 3), "பதத்தெழு மந்திர மஞ்செழுத்
தோதிப் பரிவினொடு, மிதத்தெழு மாணித னின்னுயி ருண்ண
வெகுண்டடர்த்த, கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக,
வுதைத்தெழுசேவடி யான்கட வூருறை யுத்தமனே" (திருவித்தம் - 2),
என்பன்வாதி எண்ணிறந்த தமிழ்மறைத் திருவாக்குக்களில் இப்பெருமை
பாராட்டித் துதிக்கப்பெற்றது காண்க. "மார்க்கண்டர்க்காக
|