என்று தொடர்புபடுத்திக்கூட்டி,
முரன்றிட - முரன்றிடலால், மெல்லியவாயின
கண்கள் உடையவே கரும்பு தேன் சொரியும் என்று காரணகாரியப்
பொருளில் வந்த வினையெச்சமாக உரைத்தலுமாம். இப்பொருளில், நல்ல
பாட்டுக் கேட்டோர் உள்ள முருகிக் கண்ணீர் பெருக்குமியல்பு குறித்த
தற்குறிப்பேற்ற அணியாம். இசையினுக்கு சராசரவுயிர்களும் அசேதனங்களும்
இளகுவன என்பது இசையினியல்பாம். ஆனாயநாயனார் புராணம் 30, 31, 34,
36 பாட்டுக்கள் பார்க்க. "மருவியகால் விசைத்தசையா; மரங்கண்மலர்ச்
சினைசலியா; கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா” (க்ஷ 35)
என்றதும் பிறவும் காண்க. இசை பாடினால் அது கேட்டுப் பசுக்கள் அதிகம்
பால் சுரக்கும் என்பதும் உயிர்நூற் சாத்திரிகள் கண்டவுண்மை. முருகர் -
புரா - (4), திருநா - 158-ம் பார்க்க.
முரன்றிடத்
தேன்பொழியும் என்றது பசியாற்றாது கதறுவோருக்கு
உணவு ஈயும் கருணையாளரியல்பையும் நினைவூட்டுவது காண்க.
முரன்றிட
மென்கண் உடைய - மென்கண் ஆகிஉடைய. வண்டுகள்
பண்முரல, வலிய கணுக்கள் இளகி மெலியவாயின. இவ்வாறு கணுக்கள்
உண்மெலிதலினால் அவற்றின்மேற் பரவியதோலும் உட்பொதிந்த தேனைக்
கட்டித் தாங்கமாட்டாது விட்டு வாய்பிளந்தது; வாய்விடவே, மிக உள்ளூறிய
தேன் வெளிச்சொரிந்தது எனக் கண்டு கொள்க. கரும்புகளிற் கணுக்களின்
பாகங்கள் கடினமானவை. இவ்வாறன்றி மென்கண் உடைய
என்றதற்கு
மெல்லிய கண்களுடைய என்று கூறும் உரை பொருந்தாமை யறிக.
"கருஞ்சகட மிளகவளர் கரும்பு" என்ற ஆளுடைய பிள்ளையாரது
திருக்கழுமலத் (மேகராகக் குறிஞ்சி) தேவாரத்தினும் கரும்புகளினது
கணுக்களின் வன்மை காட்டப்படுதல் காண்க. கரும்பின் கணு அல்லாத
பகுதி மெல்லியனவாதலும் காண்க.
கண்,
வாய் என்ற உறுப்புக்களின் பெயர்களுள் தொனித்தலும்,
கணமங்கலம் என்ற பெயருக்கேற்பப் பலவகை மங்கலப் பொருள்களையும்
சுட்டுதலும் காண்க.
தேன்
- இங்கு - இனிமையுடைய கருப்பஞ்சாறுகுறித்தது. சொரியும்
-
சொரிதற் கிடமாகிய.
இத்தலம்
(கணமங்கலம்) திருத்தண்டலை நீணெறிக்கு மிக அணிமையில்
(அதனின்றும் 1/4 நாழிகை) உள்ளதென் றறியப்படுதலின் அதனை
நினைவினிற் கொண்டு, நம்போலியருக்கு நினைவூட்டும் பொருட்டு
அத்தலத்தின் ஆளுடைய பிள்ளையாரது "விரும்புந் திங்களுங்
கங்கையும்
விம்மவே, சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை
யார்க்கிடங், கரும்புஞ்
செந்நெலுங் காய்கமு கின்வளம், நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே"
என்ற திருப்பதிக முதற்பாசுரத்தின் சொல்லும் பொருளும், யாப்பும்
ஆகியவற்றை அடியொற்றியே ஆசிரியர் அமைத்திருத்தல் சிந்திக்கற்பாலது.
இப்பாட்டிற் கரும்பும், வரும் பாட்டிற் செந்நெல்லுங்
கூறியதும் காண்க.
கணமங்கலம்
- தலவிசேடம் பார்க்க. 1
904. |
செந்நெ லார்வயற்
கட்டசெந் தாமரை முன்னர்
நந்துமிழ் முத்தஞ் சொரிந்திடத் துன்னு
மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுளார். |
2 |
(இ-ள்.)
வெளிப்படை.
செந்நெற் பயிர் நிறைந்த வயல்களிற்
களையாகப் பிடுங்கப்பட்ட தாமரைப் பூக்களை, அவற்றில் முன்னே சங்கு
ஈன்று தங்கியமுத்துக்களைச் சொரிந்திடும்படி நெருங்கிய மள்ளர்கள்
கையிற்கொண்டு தோன்றுவதனால், (அவர்கள்) பங்கய மாநிதி கொண்ட
தேவர்கள் போன்று உள்ளார்கள்.
|