சாரல்
- புறவம் - மருதம் - நெய்தல் இவை நானிலப் பகுதிகள்.
செம்மணியும் நறவமும் கயலும் நித்திலமும் முறையே இவற்றிற் படும்
கருப்பொருள்கள். அருவியும் ஆறும் குறிஞ்சியிலும், வாவி மருதத்திலும்
உள்ள நீர்நிலைகள். 6
1084. |
குறவர் பன்மணி
யரித்திதை விதைப்பன குறிஞ்சி;
கறவை யானிரை மானுடன் பயில்வன கானம்;
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம்;
சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல். |
7 |
(இ-ள்.)
வெளிப்படை. குறவர்கள் பல மணிகளையும் அரித்து
எடுத்துப் போக்கிக் காராமணிகளை விதைத்தற்கிடவமான குறிஞ்சி; கறவைக்
கூட்டங்கள் மான்களுடன் பயில்வதற்கிடமாவன காடுகள்; பறவைகள் தாமரை
மலரிலிருந்து கொண்டு இறால் மீன்களை உண்ணுதற்கிடமாவன வயல்கள்;
சுறா மீன்களின் முட்களையுடைய கொம்புகளைத் தெய்வப்படிமமாக வைத்து
விழாக் கொண்டாடுதற்கிடமாவன கழியிடங்கள்.
(வி-ரை.)
குறிஞ்சி - குறிஞ்சி நிலம்.
குறவர் - குறிஞ்சிநில மக்கள்.
இதை - காராமணி. இதை விளைத்தல் அவர்களது
தொழில். மணியரித்து
இதை விளைத்தல் என்பது மணிகள் பரல்போன்று பயிர்
விளைத்தற்கிடையூறான ஆதலின் அவற்றைப் பருக்கைக் கற்களோடொப்ப
அரித்து எடுத்து எறிந்தார்கள் என்னக. பயிர்க்குக் கேடுசெய்வதில்
விலையுயர்ந்த மணிகளும் ஏனைப் பருக்கைக் கற்களும் ஒன்று போலவே
அமைவன; ஆதலின் அரித்து எறிந்தார் எனப்பெற்றது. "நடவந்தவுழவரிது
நடவொணா வகைபரலாய்த் தென்று துன்று, கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே" (மேக - குறிஞ்சி - 8) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரம் காண்க.
கறவை
ஆனிரை - மான் - முல்லைக் கருப்பொருள். முல்லையின்
மாக்களாகிய ஆனும் (பசு) மானும் ஒருசேரக் கூடிவாழும் இயல்புடையன.
கானம் - காடு. முல்லை நிலப்பகுதி.
தாமரையிலிருந்து
பறவை இற அருந்துவ என்க. அருந்துவ
-
உண்பன. உண்பதற்கிடமாவன. பழனம் - வயல்.
மருதநிலப் பகுதி. இற -
இறால்மீன். இறா என்பது இற என நின்றது.
கழிச்சூழல்
- கழிகள் பரவிச் சூழ்ந்த இடங்கள். கழி
- கடல்நீர்
அலைகளினால் உந்தப்பட்டு நிலப்பரப்பினுள் வந்து தங்குமிடங்கள்.
அணங்கயர்தல் - விழாக் கொண்டாடுதல்.
சுறவ
முள் அருப்பு அணங்கயர்தல் - சுறாமீனின் முள்ளையுடைய
எலும்புகளைத் தெய்வத்தின் குறியாக வைத்துத் திருவிழாச் செய்தல் அந்நில
வழக்கு.
கானம்
- முல்லை. பழனம் - வயல் மருதம். கழிச்சூழல்
- நெய்தல்.
இதை, ஆனும் - மானும், இறவு, சுறவு, இவை முறையே குறிஞ்சி
முதலிய நானிலத் திணைக்கும் உரிய கருப்பொருள்களாம். 7
1085. |
கொண்டல்
வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்;
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்;
வண்டன் மூத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்;
கண்டன் முன்றுறைக் கரிசொரி வனகலங் கடற்பால். |
8 |
(இ-ள்.)
வெளிப்படை.
குலவரையிடங்களில் (மலையிடங்களில்)
மேகங்கள் வானத்தினின்று முத்துக்களைச் சொரிகின்றன; முல்லையின்
அயலிடங்களில்.
|