ஆளுடைய
அடிகள்
எட்டாந்
திருமுறை திருவாசகம் திருத்தோணோக்கம்
தீதில்லை
மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப வீசன் றிருவருறாற் றேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். (7) |
சேந்தனார்
ஒன்பதாந் திருமுறை பண் - பஞ்சமம்
திருவிசைப்பா - திருப்பல்லாண்டு - கோயில்
தாதையைத்
தாளற வீசிய சண்டிக்கு மண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச்
சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்குநாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (10) |
திருமூலதேவ
நாயனார்
பத்தாந் திருமுறை திருமந்திரம் (2-ம் தந்திரம்)
உறுவ
தறிதண்டி யொண்மணற் கூட்டி
யறுவகை யானைந்து மாட்டத்தன் றாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. (15) |
நக்கீரர்
பதினோராந்
திருமுறை கைலைபாதிகாளத்திபாதி யந்தாதி
வந்தமர
ரேத்து மடைகூழும் வார்சடைமேற்
கொந்தவிழு மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேற்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு. (31) |
கோபப்பிரசாதம்
...மானுடனாகிய
சண்டியை, வானவ னாக்கியும்.......
(10
- 11) |
போற்றித்
திருக்கலிவெண்பா ........மட்டித்து
வாலுகத்தா
னல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேற்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுகைத்தங்
கோட்டியவன் றாதை யீருதா ளெறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கட்
பொற்கோயி லுள்ளிருத்திப் பூமாலை போனகமு
நற்கோல மீந்த நலம்போற்றி - ............. (19
- 22) |
|