பக்கம் எண் :


1624 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
    பட்டினத்துப்பிள்ளையார் திருவேகம்பமுடையார் திருவந்தாதி

இனியவ ரின்னா ரவரையொப் பார்பிற ரென்னவொண்ணாத்
தனியவர் தையலுடனா மவர்தரு மம்பணித்த
முனியவ ரேது முகந்தமுக் கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி யேகம்பரே.
(48)

      நம்பியாண்டார்நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி

குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் றண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமே
னலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.
  (22)

   சேக்கிழார் நாயனார் பண்னிரண்டாம் திருமுறை சண்டீசநாயனார்
                        புராணம்

1219.



நன்றி புரியு மவர்தம்பா னன்மை மறையின் றுறைவிளங்க
என்று மறையோர் குலம்பெருக வேழு புவனங் களுமுய்ய
மன்றி னடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயஞ் செய்தார் விசார சருமனார். (12)
   
1242.




பெருமை பிறங்குஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்த முள்ளத்தில்
ஒருமை நினைவா லும்பர்பிரா னுவக்கும் பூசை யுறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றிற் றேடா தனவன் பினினிரப்பி
வருமந் நெறியே யர்ச்சனைசெய் தருளி வணங்கி
                                   மகிழ்கின்றார். (37)
   
1261.




அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிப னாக்கி யனைத்துநாம்
உண்ட கலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோ மென்றங் கவர்பொற்றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச்
                                     சூட்டினார். (56)
   
1262.




எல்லா வுலகு மார்ப்பெடுப்ப வெங்கு மலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர் பாடி யாடிக் களிபயிலச்
சொல்லார் மறைக டுதிசெய்யச் சூழ்பல் லியங்க ளெழச்சைவ
நல்லா றோங்க நாயகமா நங்கள் பெருமான்
                               றொழுதணைந்தார். (57)
   
1264.



வந்து மிகைசெய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவர்
அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்;
இந்த நிலைமை யறிந்தாரா? ரீறி லாதார் தமக்கன்பு
தந்த வடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்! (59)