பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1625

 
                திருஞானசம்பந்தநாயனார் புராணம்

ஞானசம் பந்தரு நாய னார்சடைத்
தூநறுந் தொடையன்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி யென்று நித்தில
யானமுன் னிழிந்தெதி ரிறைஞ்சி யெய்தினார்.
(244)
வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதா டடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.       (248)

சைவத் தெய்வத்திருமுறைத்திரட்டு முற்றும்
சேதுபுராணம் கடவுள் வாழ்த்து


மனாதிகளுக் கெட்டாத பரமா னந்த
     வாழ்வினையங் கோரிலிங்க மணலாற் கூப்பித்
தனாதிதயந் தனினின்றுந் தாபித் தான்பா
     றழைத்தவன்பா லாட்டவந்து தடுக்கத் தாதை
யெனாதவன்ற னிருபதமு மழுவாற் றுண்டித்
     திகழ்ந்தவனைப் பரபதத்து ளிருத்தித் தானும்
பினாகியரு ளடைந்தவிறற் சண்டே சன்றாள்
     பிரசமல ரிறைத்திறைஞ்சிப் பரசு வாமே. (12)


                              - நிரம்பவழகியதேசிகர்