பொங்கிய
- வேகத்தாலும் கொழுமையாலும் மிக்க கூட்டமாய்வந்து
கூடிய என்றலுமாம். முன்னர், "வெருவர எருவை நெருங்கின" (626) என்றது
காண்க. பருந்து கழுகினத்திற் பெரிய உருவுடையனவாய்
அச்சம்
விளைக்குமாறு கொடுஞ்செயல் செய்யுமியல்புடையதோர் சாதி. பருந்தொடு
கழுகு குடர் கொண்டு எழுபொழுது எனக்கூட்டுக. குடர் கொண்டெழுதல்
- குடரினைப்பற்றி எழுதலும் அதனாலே அத்தொடர்புப் பற்றிலே வீரனது
உடலையும் மேலே கொண்டு எழுதலும் உட்கொண்டது.
விஞ்சையர்
- வித்தியாதரர், தேவச்சாதியாருள் ஒருவகையினர்
வானிற் பறப்பர் - கானம்வல்லவர் - போர் வன்மையுடையார் என்ப.
விண்படர் - கொடிவிடு - பண்பயில் என்பன மூன்றும் தனித்தனி விஞ்சையர்
குமரர்க்கு அடை மொழிகள். கொடிவிடு விஞ்சையர் குமரரை
வென்றனர்
- காற்றாடிப்பட்டம் பறக்க விட்டு விளையாட்டயரும் வித்தியாதரச்
சிறுவரிலும் மிக்காராயினர். விஞ்சையர் குமரர் - மேலே தூக்கிச்செல்லப்பட்ட
வீரர்க்கும், பட்டம் - கழுகுபருந்துகட்கும் பட்டம் விடும் கயிறு - ஒரு புறம்
கழுகு பருந்துகளைப் பற்றியும், ஒருபுறம் வீரருடலைப்பற்றியுமுள்ள நீண்ட
குடருக்கும் ஒப்புமையாக உவமம் விரித்துக் கண்டுகொள்க. மெய்யும்
தொழிலும் பற்றிவந்ததோர் உவமம். கொடி - காற்றாடி, வென்றனர் -
குமரருக்குக் கொடிவிடுதல் வெறும் விளையாட்டேயாக, இங்கு இவர்நிலை
அமர் விளையாட்டின் மிக்க வீரங்குறித்தலால் வென்றனர்
என்றார்.
இவ்வாறன்றி
விண்படர் என்றதைக் கொடிக்கு அடையாக்கி
விண்ணிற்
படரும் பட்டம்விடும் பண்புகொண்ட வித்தையுடைய இளங்குமரரை
வென்றனர் என்றுரைப்பாருமுண்டு. இப்பொருளில் விஞ்சை
- வித்தை.
கொடிவிடுவதோர் தன்மை பெற்ற வித்தை என்பர். இப்பொருட் பொருத்தமும்
உவமானச்சிறப்பும் ஆராயத்தக்கன.
போர்
ஓய்ந்தபோது நிணமுண்ணக்கூடிய பிராணிகளில் முன்னர் 622ல்
குறித்த காக்கைக் கூட்டத்தின் செயலை மேற்பாட்டாலும், 626ல் கூறி கழுகுக்
கூட்டங்களின் செயலை இப்பாட்டாலும் கூறினார். முன்பாட்டுக்களில் வாள் -
வேல் - வில் - போர் விளைவுகளைப் பிரித்துத் தனித்தனி விரித்துப்
போர்க்கள நிகழ்ச்சி கூறிய ஆசிரியர், அவ்வீரர், போரில்
எதிரெதிராவதன்றிப் பிணமாந் தன்மை பெற்றுக் காக்கை கழுகுகட்
கிரையாவதில் யாவரும் ஒரு தன்மையராய் உள்ளராவதனாற் பிணம்படு
நிகழ்ச்சி கூறும் இவ்விரண்டு பாட்டுக்களினும் இருதிறத்து வீரருட்
பாகுபாடின்றிப் பொதுமையிற் கூறினார். 24
வேறு
632.
|
இம்முனைய
வெம்போரி லிருபடையின் வாள்வீரர்
வெம்முனையில் வீடியபின் வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாமுன்பு
தெம்முனையி லேனாதி நாதர் செயிர்த்தெழுந்தார். 25
|
(இ-ள்.)
வெளிப்படை இவ்வாறு மூண்டதாகிய கொடிய போரிலே இரு
பக்கத்தும் வீரமிக்க படைஞர் கடும்போர் புரிந்து பலர் இறந்த பின்னர்,
மடியாது எஞ்சிய தம்முடைய பல படைஞர்களும் பின்னாகத் தாம் முன்பு
போந்து, போர் செய்வாராகி ஏனாதிநாதர் சினத்தோடு மேலெழுந்தனர்.
(வி-ரை.)
இம்முனைய வெம்போர் - இகரச்சுட்டு இவ்வகையிலே
-
என முன்னர் விரித்துக் கூறியனவற்றையெல்லா மடக்கிச் சுட்டிக்காட்டியபடி.
முனையபோர் - முனைத்தலை உடையதாகிய - பகையையுடைய
- போர்.
வெம்போர் - வெம்மை -
கடுமை.
வாள்வீரர்
- வாள் இங்கு ஆயுதப் பொதுமை குறித்தது.
வெம்முனையில் - முனை -
போர். போர் செய்தலால். விடுதல் - இறத்தல்.
|