பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)200

தாரகைகளுமாகி உலவாக்காட்சி அளிக்கின்றன. இத்தகைய துறையை உடையவன்
தலைவன் என்பது இவ்வடிகளின் கருத்து.
 
     நித்திலத்தொகுதி - என்றது பலவாய்க் குழுமும் தன்மை பற்றியது;
தாரகையுருக்காண்டற்குத் தொகுதி உதவிற்று.
 
     13. காளமாசுணம் - காளத்தையுடைய பாம்பு. காளம் - கரியவிடம்; காளம் -
கருமை; அதனையுடைய விடத்துக் காயிற்று; கதிர்மதிக் குழவி - சிவந்து வளைந்து
திரண்ட கழுத்தின்பகுதிக்கு உவமை. காள மாசுணம் - சிவனது கழுத்தில் தங்கும்
கரியவிடத்துக்கு உவமை. கொள்கை - இஃது உருவும் வினையும் பற்றிய உவமை.
பாம்பு மதியைப் பற்றுதல் உபராக நிகழ்ச்சியிற் காண்பது; உள்பொருளுவமம். மதி -
கலைகள் நிறைந்த சந்திரன்; குழவி - ஈண்டு இளமை குறிக்காது உவமைப் பெயராய்
நின்றது. மதியைப் பாம்பு கோளிழைப்பது நிறைமதியினன்றி நிகழலாமை காண்க;
மாசுணம் - ஈண்டு ராகு என்னும் கரும்பாம்பு; ஆதலின் காளமாசுணம் என்றார்;
ஞாயிற்றைக் கோளிழைக்கும் கேது செம்பாம்பு என்பர்.
 
     15. வானவனும் - அண்ணலுமாகிய இறைவர் என உம்மை விரிக்க. மணி
திகழ்மிடற்று வானவன்
- “நீல மணிமிடற் றொருவன் போல” (புறம்). நனைதிகழ்
என்பதும் பாடம்.
 
     17. ஆர்கலி - கடல். இது கடன்முழக்குக்கு ஆகிவந்தது. கடல் முழக்குப் போல
முழக்குடைய விழா என்க.
 
     18. அலர் - பழிச்சொல்; அலருரை; விழாவின் ஒலிபோல அத்துணைப்
பேரொலியுடன் அலர்ச்சொல் பரவிற்று என்பது; பண்பும் வினையும் பற்றிய உவமம்;
ஊர் - அலர் சிறந்தது என்க.                                        25
 

வெண்பா
 

 
ஊரெலாந் துஞ்சி யுலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலா
மாந்துறைவா யீசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.                              26

 

     (இ-ள்) ஊரெலாம்....பாயிருட்கண் - ஊரில் உள்ள உயிர்கள் எல்லாம் உறங்கி,
உலகமெங்கும் நடு இரவில் அடங்கி, நிலமெங்கும் ஓசையடங்கிய பரவிய இருளிலே;
சீருலாம்....புள் - சிறப்புடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவரது அழகிய
நீரினையுடைய திருமறைக்காட்டின் பூந்துறையின்கண் புட்கள் இரை மேய்ந்து
கண்ணுறங்காதிருக்கின்றன.
 
     (வி-ரை) திணை - கைக்கிளை; துறை - இரவுநீடு பருவரல்; பிரிவாற்றாத
தலைவி கூற்று.
 
     ஊரெலாம்...பாயிருட்கண் - ஊரில், உலகில் பாரில் எல்லாவுயிரும் உறங்கிய
நள்ளிருளிலும் தான் உறங்காது தனியிரங்கும் நிலை. புள் துறைவாய் மேய்ந்து
உறங்கா
- தனது நிலையினைப் புட்களின்மேல் வைத்துக் கண்டு கூறியது. மேய்ந்து;
இரைமேய்ந்து; புள் - இரவில் இரைதேடும் புள்வகைகள்; மறைக்காட்டுப் பூந்துறை
என்றதனால் கடற்றுறை என்பதாம்; நெய்தற்றிணைக்குரிய நிலமும் ஆயிற்று,
நெய்தற்றிணை இரங்கற்குரித்து ஆகலான். பாடுஅவிந்த - ஓசையடங்கிய.