வகை;- நகுசுடர்வாள்.....வண்புகழே - வீசுகிற சுடரினையுடைய தமது உடைவாளினை (என்னையும் கொல் என்று) வெற்றியில் நிலைபெற்ற எறிபத்த நாயனார்பாற் கொடுத்ததாகிய ஒப்பற்ற வள்ளன்மையுடைய புகழானது; புலமன்னிய.....பொடிபடுத்த - அயற்புலங்களில் நின்ற அரசனது சிங்கள நாட்டினை அழித்து வெற்றிகொண்ட; குலமன்னிய....குலமுதலோன் - சோழர் குலத்துக்குரிய புகழினையுடைய கோகன நாதன் என்னும் சோழன் மரபில் அவதரித்த முதல்வராகிய; நலமன்னிய......என்பர் - நன்மை பொருந்திய புகழ்ச் சோழரது உடைமையாம் என்று கூறுவர். |
புகழே - புகழ்ச்சோழன தென்பர் - என்று கூட்டி முடித்துக் கொள்க; புலம் - அயற்புலம், பகைப்புலம்; புலம் - நாடு ; சிங்களநாடு - மன்னை - என்று கூட்டுக. சிங்கள நாட்டைச் சோழர்கள் வென்று அடிப்படுத்தி ஆண்ட சரிதவரலாறு குறிக்கப்பட்டது. சிங்களம் என்பது ஈழநாடு. (ceylon); இலங்கை எனப்படுவது; “தென்னாடு மீழமுங் கொண்டதிறல்” (தேவா) கோகனநாதன் - சோழரது பெயர்; ஆதித்தச் சோழர் பெயரைக் குறிப்பிட்டது போலும். இந்நாடு பரதநாட்டுக்குத் தென்பாலில் கடல் கடந்து சேரும் தொலைவில் உள்ளதனால் “அவனி யெலாம் தாங்கிய” (3941) என்று இதனைக்குறிப்பித்தனர் ஆசிரியர். எறிபத்தனுக்கு - வாள் - ஈந்த - புகழ் - இது முன்னர் எறிபத்த நாயனார் புராணத்தில் விரிவாயுரைக்கப்பட்டது. இப்புராணத்துள்ளும் ஆசிரியர் இதனை, மேல் (3956) சுருக்கி உரைக்கின்றமை காண்க. ஈந்த - கையில் கொடுத்த; வலம் - வெற்றி; அரசரது பட்டத்து யானை என்றும் பாராது, தம்முயிருக்கு நேரக்கூடிய பயத்தினையும் பாராது, பாகரையும் யானையையும் வெட்டி வீழ்த்திச் சிவாபராதத்துக்குக் கழுவாய் செய்த வீரம் வெற்றி எனப்பட்டது; நகுதல் - வீசுதல், |
நாடும் பேரும் மரபும் வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது. இவை விரிந்தபடி விரிநூலுட் காண்க. |
விரி: 3942. (இ-ள்) குலகிரியின்....எழுதி - இமயமலையின் உச்சியின்மேல் தமது வேங்கைக் கொடியின் குறியினைப் பொறித்து; நிலவுதரும்........வளநாட்டு - வெள்ளிய ஒளி வீசுகின்ற முழுமதி போன்ற வெண்கொற்றக் குடை நிழலின்கீழே நீண்ட நிலவுலகத்தினைக் காத்து இன்பம் பெருக அரசளிக்கும் விரியும் புகழினையும்வண்மையினையும் உடைய தமிழ் மன்னர்களாகிய சோழர்களால் ஆளப்பட்ட வளநாட்டில்; மாமூதூர்...உறையூர் - உலகில் வளர்ந்தோங்கும் அழகுகளுக்கெல்லாம் உள்ளுறை இதுவேயாம் என்று சொல்லத்தக்க உறையூர் என்பது பெரிய பழைய ஊராகும். |
(வி-ரை) உறையூர் - சோழர் வளநாட்டு மாமூதூர் - என்க. |
குலகிரி - இமயம்; பொன்மலை என்பதுமாம்; மேரு - இமயம் - மந்தரம் இவற்றை ஒன்றாகக் கூறுதல் வழக்கில் வந்தது. “புண்டரிகம் பொன்வரைமே லேற்றிப் புவியளிக்கும்” (608), “பொன்மலைப் புலிவென்றோங்க” (55) என்று இதனை முன்னருங் குறித்தமை காண்க. குலகிரி - வேங்கைக் குறி - நெடுநிலம் - வண்டமிழ் - மூதூர் - பண்புத்தொகைகள். மேல் - ஏழனுருபு நிலவுதரு - 2- ம் வேற்றுமைத் தொகை” மதிக்குடை - உவமைத் தொகை; புகழ்ச்சோழரது சரிதந் தொடங்குகின்றாராதலின் புகழ்பற்றிக் கூறினார். குலகிரியின்.....எழுதி - தங்கள் ஆட்சி வடகோட்டுஇமயமலைவரையும் சென்றது என்றறிவிக்க, அவ்வளவும் நிலம் அடிப்படுத்தி அதற்கறிகுறியாக வேங்கைக்குறியினை அம்மலையினுச்சியிற் சோழர் பொறித்த |