தற்குறிப்பேற்ற அணிநலம்பட உரைத்தவாறு; கள்வர் வல்லிதிற் கவர்ந்த பொருள்களைச் சேமித்த இடம் தெரிந்தால் அவற்றைப் பறியுண்டோர் அவ்விடத்தினைச் சூழ்ந்து காவல் இட்டு அவற்றை மீளப்பெற முயலும் உலகியல் நிகழ்ச்சி பற்றி உரைக்கப்பட்டது. |
அயிராவதம் - என்பது முதல்குறைந்து இராபதம் என நின்றது. |
துரங்க அரசு - குதிரைகளின் மேம்பட்ட அரசப் புரவியான உச்சைக் சிரவம் என்பது. திரு - இலக்குமி; இங்கு அவள் உருவமாகிய செல்வங்களைக் குறித்தது. |
விளைத்த அமுது - விளைத்தல் - கடைந்தெடுத்தல். |
தரு - கற்பகம்; மணி - சிந்தாமணி. |
கொடுபோத - கைப்பற்றிக் கொண்டு போதலினால்; கொடு - கொண்டு; பறியுண்டமையால் என்பது குறிப்பு; உளைத்தகடல் - உளைத்த - வயிறு வாய்ந்து தான் ஈன்றவற்றை இழந்ததனால் வருந்திய. |
ஒன்று - ஒன்றையேனும்; பெற - மீட்டுப்பெற. |
உம்பரூர் வளைத்தது போன்று - உம்பர் ஊர் - பொன்னகரம்; ஊரினை - இரண்டனுருபு விரிக்க. வளைத்தல் - சூழ்தல்; முற்றுகையிடல் என்றுரைக்கவும் நின்றது. |
அவ்வூர் பொன்னகரம் போன்றுள்ளது என்பதும் அகழி கடல்போன்றுள்ளது என்பதும் உட்குறிப்பு. |
இரவொழிய வெறிப்பன - போக மனைத்தினுக் குறுப்பரம் வளம் - களிற்று நிரை - துரங்கசாலை - என முன்கூறியவற்றுள் ஒவ்வொன்றும் பாற்கடல் தந்த இவற்றை ஒப்பன என்பது. அவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெற விரும்பியது பாற்கடல் என்பதன் குறிப்பு. |
உம்பரூர் - இதுபோலவே கருவூரையும் அமரர்புரி (3953) என்பதும் காண்க. 6 |
3948. | காரேறுங் கோபுரங்கள் கதிரேறு மலர்ச்சோலை தேரேறு மணிவீதி திசையேறும் வசையிலணி வாரேறு முலைமடவார் மருங்கேறு மலர்க்கணையொண் பாரேறும் புகழுறந்தைப் பதியின்வளம் பகர்வரிதால். 7 |
(இ-ள்) காரேறும்......வசையிலணி - மேகங்கள் தவழ்ந்தேறுகின்ற கோபுரங்களையும், இரு கதிர்களும் ஏறும் மலர்கள் நிறைந்த சோலைகளையும், தேர்கள் உலவுகின்ற அழகிய வீதிகளையும், எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிச் செல்கின்ற வசையில்லாத அழகுகளையும் உடைமையால்; வாரேறும்....பாரேறும் புகழ - கச்சணிந்த முலையினையுடைய பெண்களிடையேயேறும் மலரம்புகளின் செயல் வாய்ந்த ஒள்ளிய உலக முழுதும் பரவும் புகழ்பூண்ட; உறந்தை....பகர்வரிதால் - உறையூர் என்ற பதியினது வனங்களைச் சொல்லுதல் அரிதாகும் (எறிதன்று). |
(வி-ரை) ஏறும் - என்பன பெயரெச்ச முடிபுகளாகக் கொண்டு அங்கங்கும் கூட்டிமுடித்துக் கொள்க. இங்ஙனமன்றி, முதல் நான்கினையும் வினைமுற்றுக்களாகக் கொண்டு, (இந்நகரத்தின்) கோபுரங்களில் கார் ஏறும்; சோலைகளில் கதிர்கள் ஏறும்; வீதிகளில் தேர் ஏறும்; அணிகள் திசை ஏறும் என்று முடித்துரைப்பதுமாம். |
காரேறும் கோபுரங்கள் - கதிர்ஏறும் மலர்ச்சோலை - கோபுரங் ளும் சோலைகளும் வானளாவ வுயர்ந்துள்ள சிறப்புக் குறித்தபடி. |