பக்கம் எண் :

பெரியபுராணம்241

     3950. (இ-ள்) ஒரு குடைக்கீழ்.....மணம்புணர்ந்து - தமது ஒரு குடையின் கீழே
குளிர் தூங்கும்படி பூமிதேவியைத் தமக்கே உரிமையாக மணந்து பருவரை.....பணிகேட்ப
- பருத்த மலைபோன்ற தமது தோளின் வெற்றியினாலே உலகத்தின் பகை அரசர்கள்
தமது ஏவலின் வழிநின்று நடக்கவும்; திருமலர்த்தும்....முறை நிற்ப -செல்வத்தாற்செழிப்புப் பொருந்தும் பெரிய உலக முழுதும் தமது செங்கோலின்ஆணைமுறை வழியே நிற்கவும்; அருமறைச் சைவந் தழைப்ப - அரிய வைதிக சைவம் தழைத்தோங்கவும்; அரசளிக்கும் அந்நாளில் - அரசு புரிகின்ற
அந்நாளிலே;                                                                 
                                                                     9
     3951. (இ-ள்) பிறைவளரும்...விளங்க - பிறைவளர்தற் கிடமாகிய சிவந்த
சடையினையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் சிவாலயங்களெல்லாவற்றிலும்
நிறைந்த பெரும் பூசனைகள் விளங்கச் செய்து; நீடு....கொடுத்தருளி - நீடும்
திருத்தொண்டர்களைக் குறையிரந்து அடுத்து உபசரித்து அவர்களுக்கு
வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுத்தருளி; முறைபுரிந்து - அரசாட்சி செய்து;
திருநீற்று ....பாலிப்பார் - முதன்மை பெற்ற திருநீற்று நெறியினையே
பாதுகாப்பாராகி.                                                        10
 
     3952. (இ-ள்) அங்கண் இனிது உறையும் நாள் - அங்கு இனிதாக இருக்கின்ற
நாளிலே; அரசு.....வீற்றிருந்து - அரசர்கள் அடிவணங்க அரசு வீற்றிருந்து;
கொங்கரொடு.....கொணர - கொங்கர்களும் மேற்றிசையின் முதல்வர்களாகிய
சிற்றரசர்களும் கப்பம் கொண்டுவந்து செலுத்தும் பொருட்டு; தங்கள்.....வந்தணைந்தார் -
தமது குலமரபுக் குரிமையுடைய ஒப்பற்ற பெருநகரமாகிய கருவூரிலே மங்கல நாளிலே
அரசுரிமைச் சுற்றமாகிய மந்திரிகள் முதலாயினோருடன் வந்து சேர்ந்தனர்.         11
 
     இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     3950. (வி-ரை) ஒரு குடைக்கீழ்....மணம் புணர்ந்து - தமது ஒரு குடையின்கீழ்
உரிமைப்படி நிலம் முழுதும் ஆட்சியுள் வரும்படி முடிசூடி; ஏகசக்கிராதி பத்தியம்
என்பது வடமொழி வழக்கு. மண் மகளைமணம் புணர்தல் என்பது நிலத்தின்
அரசாட்சியினை மேற்கொள்ளுதல் என்று குறிக்கக் கூறும் உபசார வழக்கு. ஒரு குடை
- மண்மகள் - பேருலகு - செங்கோல் - அருமறை - பருவரை
-
பண்புத்தொகைகள்.
 
     பருவரைத் தோள்....கேட்ப -இது பகைப் புலத்தவர்களாய் அடங்காத
மன்னர்களை வென்று அடிப்படுத்திப் பணிகேட்கச் செய்து அளிக்கும் ஆட்சியினைக்
குறித்தது.
 
     திருமலர்த்து.....முறை நிற்ப - இது தம் வழி நிற்கும் உலகினை ஆளும்
ஆட்சியினைக் குறித்தது.
 
     திருமலர்த்தும் பேருலகு - திருவினால் விளக்கமுறும் பெரிய உலகம்; சோழர்
நாடு. விண்ணுலக ஆட்சி என்றலுமாம்; இப்பொருளில் முன் “பார்மன்னர்” என்றது
நிலவுலக ஆட்சியினைக் குறித்ததென்க.
 
     அருமறைச் சைவம் - வேதநெறித் தொடர்புடைய சைவநெறி; வைதிகசைவம்;
தழைப்ப - இதனை மேல்வரும் பாட்டில் விரிப்பார். “வேதப் பயனாம் சைவம்” (1214).
 
     அந்நாளில் - பாலிப்பார் - வந்தணைந்தார் - என்று முடிக்க.          9
 
     3951. (வி-ரை) முன்பாட்டினால் அரசாட்சியின் உலகியல் முறை கூறினார்.
இப்பாட்டினால் அரசாட்சியின் உயர்ந்த குறிக்கோளாகிய உயிரியல் முறை கூறுகின்றார்.