புரிந்தவன் என்று புறநானூறு அறிவிக்கின்றது.1 இவனது மேற்கூறிய நகரமும் மலைகளும் சோழரது தலைநகரமாகிய கருவூருக்கு அணிமையில் உள்ளன. நெடுஞ்சடையன் என்னும் பாண்டியன் அதியமானை அயிரூர் -புகழியூர் - என்ற இரண்டிடங்களிற் போரிற்புறங்கண்டான் என்று அறியப்படுகின்ற அவ்விரண்டு (அயிலூர் புகழூர் - என வழங்கப்படுகின்றன) ஊர்களும் கருவூரின் பக்கத்தில் உள்ளன; அவன் இப்போரிலும் உடைந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். (3970) |
அணித்தாக ஓங்கெயில் சூழ்மலை அரணம் - தகடூரும், கொல்லிமலை குதிரை மலைகளும்; முன் கூறியவை காண்க.2 |
நுமக்கு எதிர்நிற்கும் அரணுளதோ? - நுமக்கு - சேனைப் பெருவீரமும் வலிமையும் வாய்ந்த உமது படையின் விறலுக்கு; எதிர்நிற்றல் - பகைத்து நிலை நிற்றல்; அரணும் உளதோ - என்று உம்மை விரிக்க. ஓகாரம் வினா; எதிர்மறை இன்மை குறித்தது. இஃது அரசர்கள் தமது சேனை வீரர்களைத் தேற்றி வீரம் விளைக்கும் மரபுகளுள் ஒன்று. தமது படை வலிமையினை அமைச்சர்கள் மேல் ஏற்றிக்கூறியது அரசாட்சித் திறமாகிய மதியூகம். |
படைஎழுந்து....பற்றறுப்பீர் - இது அமைச்சர்க்கு அரசர் இட்ட கட்டளை; “ஆணை” - (3958) துகளாக - துகளாகச் செய்து; பற்று - பற்றுக்கோடாக நின்ற அரணத்தை; அரணம் - காவல் பொருந்திய இடம். |
பற்றுவீர் - என்பதும் பாடம். 17 |
3959. | அடல்வளவ ராணையினா லமைச்சர்களும் புறம்போந்து கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார் படர்வனமு நெடுங்கிரியும் பயிலரணும் பொடியாக மிடலுடைநாற் கருவியுற வெஞ்சமத்தை மிகவிளைத்தார். 18 |
(இ-ள்) அடல்.....மேற்செல்வார் - வல்லமையுடைய சோழரது ஆணைப்படி அமைச்சர்களும் புறத்தே போந்து கடல்போன்ற பெரும்படைகளை அணிவகுத்து மேலே போருக்குச் செல்வார்களாய்; படர்வனமும்....மிக விளைத்தார் - படர்ந்து மிடைந்த வனங்களும் உயர்ந்த மலைகளும் பயிலும் அரணங்களும் பொடியாகும்படி வலிய நாற்பெரும் படைகளும் பொருந்த வெவ்விய போரினை மிகவும் விளைவித்தார்கள். |
(வி-ரை) ஆணை - படைஎழுந்து அரணம் துகளாகப் பற்றறுப்பீர் (3958) என்ற கட்டளை. |
புறம் - நகர்ப்புறம்; சேனைகளுக்கு இடம் வகுத்த கூடம் முதலியன உள்ள புறநகர். |
கைவகுத்து - அணிவகுத்து; மேற்செல்லுதல் - போர் முகத்துப் புகுதல். பகைமேற் சேறல். |
இது வஞ்சித் திணை: மேற்செல்வார் - முற்றெச்சம்; படர்வனம் - படர்தல் - செறிந்து விரிந்து பரவுதல். - - - - - - - - - - - |
1 :- புறநானூறு 87 - 95, 97 - 101, 103 -104, 158 - 206, 208 - 231, 232 - 235, 310 - 315, 390. இவனைப் பாடினோர் ஒளவையார், பரணர் முதலியோர். |
2. குறிப்பு:- இவைபற்றி எனது சேக்கிழார் என்ற நூலில் அதிகன் என்ற தலைப்பின் கீழ் 111 - 113 பக்கங்களிற் கூறியவற்றையும், அவற்றுட் கூறிய பழந்தமிழ் நூல்கள் முதலிய வரலாறுகளையும் பார்க்க. |