பக்கம் எண் :

பெரியபுராணம்311

இறந்தது தழுவியது. கனவினும் - தம் விழிப்புநிலை வசமிழந்த அந்நிலையினும் என்று
சிறப்பும்மையுமாம்.
 

     கையறவு - வேறு செயலற்ற நிலை; தமது பொருட் சார்வு - உடல் முயற்சிச்
சார்வு - உயிர்ச் சார்வு முதலிய எல்லாம் தீர்ந்து கழிந்தனவாதலின் கையற்ற நிலையில்;
கை - துணை.
 

     எய்தினார் - திருக்கோயிலில் சேர்ந்தனர். திருக்கோயிலில் என்பது
குறிப்பெச்சம்.
 
     மனமகிழ்ந்து - இஃது உலகியலின் மேம்பட்ட அன்புநெறி வழக்கு; உலகியல்
நிலையில் வைத்துக் காணத் தக்கதன்று; இயற்பகை நாயனார் வரலாற்றின் நுட்பமும்
இங்கு வைத்துக் காணத்தக்கது.                                       13
 
4035. பணிகொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறு மமையத்தின்
“மணிவண்ணச் சுடர்விளக்கு மாளிலியான் மாள்வ” னெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார்,         14
 
4036. திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பிச் செயனிரம்ப
வொருவியவெண் ணெய்க்கீடா வுடலுதிரங் கொடுநிறைக்கக்
கருவியினான் மிடறரிய வக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுட னேர்வந்து பிடித்தருளி,                  15
 
4037.   மற்றவர்தம் முன்னாக மழவிடைமே லெழுந்தருள
வுற்றவூ றதுநீங்கி யொளிவிளங்க வுச்சியின்மேற்
பற்றியவஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க வருள்புரிந்தார்.           16
 
     4036. (இ-ள்) பணிகொள்ளும்...கோயிலினுள் - தம்மை அடிமைகொண்டு தமது
பணியினை ஏற்றருளும் படம்பக்க நாதரது திருக்கோயிலினுள்ளே;
அணிகொள்ளும்.....அமையத்தில் - அழகு நிறையும் திருவிளக்குத் திருப்பணி செய்ய
நின்ற அந்த நேரத்தில்; மணிவண்ண.....நினைந்து - மணிபோன்ற சுடர்களையுடைய
திருவிளக்கு எரிக்கப்படாமல் நின்று படுமாயின் நான் மாள்வதே கருமம் என்ற
துணிவினை மனம் கொள்ளும்படி நினைந்து; அவ்வினை முடிக்கத் தொடங்குவார் -
அச்செயலினையே முடிக்கத் தொடங்குவாராகி,                           14
 
     4036. (இ-ள்) திருவிளக்கு.....பரப்பி - திருவிளக்குக்களுக் கெல்லாம் திரியினை
இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி வைத்து; செயல் நிரம்ப....மிடறரிய -
அச்செயல் நிரம்பும்படி கிட்டாது ஒழிந்த எண்ணெய்க்கு ஈடாகத் தமது உடலினிறைந்த
உதிரத்தைக் கொண்டு நிறைக்கும்படி கருவிகொண்டு தமது கழுத்தினை அரியவே; அக்
கையை - அவ்வாறு அரியும் கையினை; கண்ணுதலார்......பிடித்தருளி -
நுதற்கண்ணினையுடைய இறைவர் பெருகும் திருக்கருணையுடனே நேராக வெளிப்பட்டு
வந்து அக்காரியம் செய்யவிடாமற் பிடித்தருளி,                           15
 
     4037. (இ-ள்) மற்றவர்தம்....எழுந்தருள - அவர் முன்பு இளமை பொருந்திய
இடபத்தின்மேல் எழுந்தருளி நிற்க; உற்ற...விளங்க - அரிதலினால் பொருந்