பக்கம் எண் :

1042திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்

செங்குன்றூர் வானில்

மின்றிகழ் செஞ்சடையான்

கழலேத்தல் மெய்ப்பொருளே. 5

1157. ஓங்கிய மூவிலைநற் சூல

மொருகையன் சென்னி

தாங்கிய கங்கையொடு

மதியஞ் சடைக்கணிந்து

கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச்

செங்குன்றூர் வாய்ந்த

பாங்கன தாள்தொழுவார்

வினையாய பற்றறுமே. 6

__________________________________________________

கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.

கு-ரை: ஆமையோடும் பூணூலும் விளங்கும் மார்பில், பன்றிக் கொம்பையும் அணிந்த மாதொருபாதியனான செங்குன்றூர் நாதன் கழலெத்துதலே மெய்ப்பொருள் என்கின்றது. பொன் திகழ் ஆமை ஓடு - திருமகள் விளங்குகின்ற திருமாலாகிய ஆமையின் ஓடு. பணை - மூங்கில்.

6. பொ-ரை: மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

கு-ரை: சூலமேந்திய கையனும், கங்கையும் மதியமும் சூடியவனும் ஆகிய செங்குன்றூர் நாதன் தாள் தொழுவாரது வினைப்பற்று நீங்கும் என்கின்றது. ஓங்கிய - சிறந்த. கோங்கு அணவும் - கோங்க