1179. கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே. 6
1180. வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே. 7
1181. மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
_________________________________________________
படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன
நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம்
என்னும் நகரமாகும்.
கு-ரை: அருந்திறல் - பிறரால் வெல்லுதற்கு
அரிய வலிமை. சரம் துரந்து - அம்பைச் செலுத்தி. சங்கரன்
- சுகத்தைச் செய்பவன். குருந்து - குருந்தமரம். மாதவி
- குருக்கத்தி, புறவு - காடு.
6. பொ-ரை: கலைகளாக விளங்குபவனும்,
வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண்
முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற
அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு
கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும்
ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.
கு-ரை: கலையவன் - கல்வியினால் எய்தும்
பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த கொலையவன்
எனக்கூட்டுக.
7. பொ-ரை: வானத்தில் உலவும் பிறை
மதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி,
அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம்,
காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு
கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான
சிரபுரமாகும்.
கு-ரை: தானவர் - அசுரர். கான் - காடு.
8. பொ-ரை: தன்னோடு உடன்பாடு இல்லாது
மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு
அழியுமாறு சினந்தவனும்,
|