திருஞானசம்பந்தரின்
செந்தமிழ்ப் பாடல்
புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே
புத்த
னார்தலை தத்தெனத் தத்துமே
கனலில்
ஏடிடப் பச்சென்றிருக்குமே
கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே
பனையில்
ஆண்பனை பெண்பனை யாகுமே
பழைய
என்புபொற் பாவைய தாகுமே
சினவரா
விடம் தீர்கெனத் தீருமே
செய்ய
சம்பந்தன் செந்தமிழ்ப் பாடலே.
- தனிப்பாடல். |