பக்கம் எண் :

 110. திருவிடைமருதூர்1059


110. திருவிடைமருதூர்

பதிக வரலாறு:

32-ஆம் பதிகம் பார்க்க.

பண் : வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 110

திருச்சிற்றம்பலம்

1185. மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே. 1

1186. தோற்றவன் கேடவன் றுணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த

__________________________________________________

1. பொ-ரை: பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: இப்பதிகம் முழுதும் இறைவன் திருநகர் இடைமருதே என்கின்றது. மருந்தவன் - மருந்துபோல்பவன். மருந்து, நோய் நீக்கவும், நோய் வாராமல் தடுக்கவும், உடலை வளர்க்கவும் உண்ணப்படுமாறு போல இறைவனும் அநாதியே பந்தித்த மலப்பிணியினீக்கவும், வினை ஏறாமல் காக்கவும், கைவந்த சிவஞானங் கழன்றுபோம்வண்ணம் வாசனை தாக்காமல் வளர்க்கவும் உபகாரப்படுதலின் மருந்தவன் என்றருளினார். அமுதமாயினான் எனலுமாம். தானவர் - அசுரர். பிறவுஇறவு - பிறப்பு. இறப்பு. ‘வு‘ விகுதிபெற்ற தொழிற்பெயர்; மிக அருமையான பிரயோகம். முனிவரோடு ஆலநிழல் கீழ் இருந்தவன் எனப்பிரிக்க.

2. பொ-ரை: உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு