பக்கம் எண் :

 111. திருக்கடைமுடி1063


கரியவ னலரவன் காண்பரிய
எரியவன் வளநக ரிடைமருதே. 9

1194. சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநக ரிடைமருதே. 10

1195. இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோங்குவரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. கரியவன் - திருமால். அலரவன் - பிரமன்.

10. பொ-ரை: சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.

கு-ரை: சிந்தை இல் சமண் - சிந்தனை என்பதொன்றற்ற சமணர். தேரர் - புத்தர். புந்தி இல் உரை - புத்தியற்ற வார்த்தை. ஓத்து - வேதம். அரவம் - ஒலி.

11. பொ-ரை: இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.