திருப்புகழ்
கறுவி மைக்கணிட்
டினித ழைத்தியற்
கவிசொ
லிச்சிரித்து உறவாடிக்
களவு வித்தையிட்டு உளம் உருக்கிமுற்
கருதி
வைத்தவைப் பவைசேரத்
தறுக ணிற்பறித் திருக
ழுத்துறத்
தழுவி
நெக்குநெக் குயிர்சோரச்
சயன மெத்தையிற்
செயல ழிக்குமித்
தருணி
கட்ககப் படலாமோ
பிறவி யைத்தணித்
தருளு நிட்களப்
பிரம சிற்சுகக்
கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல
கொச்சையிற் சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை
நித்திலச்
சிவிகை
யைக்கொடுத் தருள்ஈசன்
செகத லத்தினிற் புகழ்ப
டைத்த மெய்த்
திருவ
ரத்துறைப்
பெருமாளே.
- அருணகிரிநாதர். |