பக்கம் எண் :

 112. திருச்சிவபுரம்1069


சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடியதனயல் காவிரியே. 9

1205. மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 10

1206. பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல வின்பமாமே. 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.

கு-ரை: அடிமுடியறியாத அயனும் மாலும் அருள் என்று போற்றிசைப்ப, கங்கைசூடிய பெருமானிடம் இது என்கின்றது. புடைபுல்கி அணுகி.

10. பொ-ரை: நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.

கு-ரை: முழுகுதலும், மயிர்பறித்தலும் ஆகிய இந்த விரத ஒழுக்கங்கள் யாவும் வெறும் மாயம்; எண்ணும்பொழுது இவை இன்பமாகா; உமாதேவியைப் பாகம்வைத்த பெருமானது இடம் இது என்கின்றது. ஒள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றி.

11. பொ-ரை: பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர்முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.