1209. மலைமகண் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகனகர்
அலைமல்கு மரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே. 3
1210. மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தனகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 4
1211. வீறுநன் குடையவள் மேனிபாகம்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
__________________________________________________
என்கின்றது. அடல் - வலிமை. பொன்றிட -
அழிய. எயிறு - கொம்பு வெண்பன்றி - திருமாலாகிய
சுவேதவராகம். இது இத்தலவரவாற்றுக்குறிப்பை
அருளியது.
3. பொ-ரை: மலைமகளாகிய பார்வதி தேவி
அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன்
தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள்
நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும்
மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.
கு-ரை: மலைமகள் அஞ்ச யானையையுரித்த
இறைவன் நகர் இது என்கின்றது. மறுகிட - கலங்க. உரிசெய்த
- உரித்த. குழகன் - இளமையையுடையவன். சிலை மல்கும் -
மலைபோல விளங்கும்.
4. பொ-ரை: மண், புனல், அனல், காற்று,
ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி
விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு
வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு
கூடிய பொழில்கள் சூழ்ந்து சிவபுரமாகும்.
கு-ரை: ஐம்பூதமுமாகிய விகிர்தனகர்
இதுவாம் என்கின்றது. மாருதம் - காற்று. பண்புனை குரல்
- பண்ணைச்செய்கின்ற குரல்.
5. பொ-ரை: அழகால் தனிப் பெருமை பெற்ற
உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக
உடையவனாகிய சிவ பிரானது
|