1214. எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வனகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 8
1215. சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 9
__________________________________________________
இருந்த இடமாம் என்கின்றது. ஆவில் ஐந்து
- பஞ்சகவ்யம். அரிவை - உமாதேவி. பூவில் வண்டு கண்ணயர்ந்திருக்கும்
பொய்கையிலே, அன்னச்சேவல் தன் பெடையைப்புல்லும்
சிவபுரம் என்பதாம்.
8. பொ-ரை: அழகிய கயிலை மலையைப்
பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை
அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக்
காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து
கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான
சிவபுரமாகும்.
கு-ரை: இராவணனின் வலியடக்கிய முதல்வன்நகர்
இது என்கின்றது. எழில்மலை - அழகியகைலை. உற்சவத்தில்
உயர்த்திய கொடிகள் மேகத்தையணுகும் சிவபுரம் என
விழாச் சிறப்பும், கொடியின் உயரமும் உரைத்தவாறு.
9. பொ-ரை: சங்கேந்திய கையினனாகிய
திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி
அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும்
பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை
நுகரும் வளம் மிக்க சிவுபுரமாகும்.
கு-ரை: அயனும்மாலும் அறியப்பெறாதவன்
நகர் இதுவாம் என்கின்றது. சங்கு அளவியகையன் -
பாஞ்சசன்யம் என்னும் சங்கு கலந்த கையையுடையவன்.
அளவு - உயரமும், ஆழமும் ஆகிய புற அளவு.
இரவிலுங் கூடப் பறவைகள் கமுகுதோறும் பழநுகரும் நகர்
என்று இருபோதும் பறவைக்கு உபகாரப்படுவது உரைக்கப்பெற்றது.
|