பக்கம் எண் :

 113. திருவல்லம்1075


1216. மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10

1217. சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே. 11

திருச்சிற்றம்பலம்

10. பொ-ரை: உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

கு-ரை: புறச்சமயிகளை விலக்கிய விமலன் நகரிதுவாம் என்கின்றது. மண்டை - உண்கலம். மாசு - அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும் பழங்காவிரி எனப் பழமைக்கு எல்லை கூறியவாறு.

11. பொ-ரை: சிவபெருமான் எழுந்தருளிய சிவபுர நகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.

கு-ரை: சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதி சேர்வர் எனப் பயன் கூறியது. நவம் - புதுமை.