பக்கம் எண் :

 118. திருப்பருப்பதம்1107


சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர்

தங்களொடும்

செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ

லோகமதே. 12

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கு-ரை: கழுமலநகர் கடவுளை ஞானசம்பந்தன் சொன்ன ஞானத்தமிழ் நல்லுரைகளைச் சொல்லவும் கேட்கவும் வல்லார் தேவரோடு சிவலோகம் பெறுவர் என்கின்றது. புண்ணியஞ்செய்து தேவராய்ப் பதவியில் நி்ற்பாரை விலக்கத் தொல்லை வானவர் என்றருளினார்.

இப்பதிகம் கட்டளைக் கலித்துறையாதலின் இப்பாடல் முதலடி. ‘கல்லுயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுடன்னை’ என்றிருந்து சிதைந்திருக்கலாம் என்பர் தி.வே. கோ.

திருத்தொண்டர் புராண சாரம்

காழிநகர்ச் சிவபாத விதயர் தந்த

கவுணியர்கோன் அழுதுமையாள் கருதி யூட்டும்

ஏழிசையி னமுதுண்டு தாளம் வாங்கி

இலங்கியநித் திலச்சிவிகை யிசைய ஏறி

வாழுமுய லகன் அகற்றிப் பந்தரேய்ந்து

வளர்கிழிபெற்று அரவின்விட மருகல் தீர்த்து

வீழிநகர்க் காசெய்தி மறைக்கதவம் பிணித்து

மீனவன்மே னியின்வெப்பு விடுவித் தாரே.

ஆரெரியிட்டு எடுத்தவே டவைமுன் னேற்றி

ஆற்றிலிடும் ஏடெதிர்போ யணைய வேற்றி

ஓரமணர் ஓழியாமே கழுவி லேற்றி

ஓதுதிருப் பதிகத்தால் ஓட மேற்றிக்

காருதவும் இடிபுத்தன் றலையில் ஏற்றிக்

காயாத பனையின்முது கனிக ளேற்றி

ஈரமிலா அங்கமுயி ரெய்த வேற்றி

இலங்குபெரு மணத்தரனை யெய்தி னாரே.

- உமாபதி சிவாசாரியர்.