திருஞானசம்பந்தர் புராணம்
கூற்றுதைத்தோர் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றின்மிசை வருவார் இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமற் றிறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும்பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந்தப்பதியில் நிலவு கின்றார்.
- சேக்கிழார்.
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க்
கெல்லாம்
தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளினைகள்
என்தலையின் மேலிருக்க என்று.
- நம்பியான்டார் நம்பி.
|